பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 15 avril 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். மன நிறைவுடனும், மகிழ்வுடனும் உங்களைச் சந்திக்கின்றேன். பல நாள், தொடர்ந்த பலரது உழைப்பால், கடந்த ஞாயிறு 11.04.2010 அன்று கம்பன் கழக மகளிரணியின் “மகளிர் விழா” இனிதே நடந்தேறியது. மலர்ந்த முகங்கள், வார்த்தைகளின்றி, விழாவின் வெற்றியைப் பறைசாற்றின. பங்கு பெற்ற, வருகை புரிந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

“சுவரை வைத்து சித்திரம் வரைய வேண்டும்” என்பது பழமொழி. அடித்தளமிட்டே எதையும் கட்டமுடியும். நமது உடல் எந்த அளவு திடமானதாகத் தோன்றுகிறதோ, அந்த அளவு நளினமானதும் கூட. எந்தவொரு சிறு நலக்குறைவும் முழு உடலையும், மனதையும் பாதிக்கும். அந்நிலையில், எதையுமே அனுபவிக்க இயலாமல் துவண்டு போகிறோம்.

நொந்த உடலும் நலிந்த மனமுமோர்
 வெந்த இரணத்தின் வேதனை சோகமும்
 சொந்த மெனினும் சுகமாய் இருந்திடும்
 பந்தம் அறியார் பகர்!

நோய் வந்த பின் மருந்துகளோடு மல்லாடுவதைவிட, வருமுன் காப்பது மேல். அந்த நோக்கில், எளிமையான, செய்யக் கூடிய ஒரு சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

-- இராசேசுவரி சிமோன்