பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 31 octobre 2014

எண்ணப் பரிமாற்றம்

கம்பன் உறவுகளின் கனிந்த வாழ்த்துகள்

இன்றைய அறிமுகம்

கைலாஷ் சத்யார்த்தி


2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக  நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது. .இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில் நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் ஆவார்.  அன்னை தெரசாவுக்கு அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இவர்  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார்.எலெக்ட்ரிகல் என்ஜினீயரான இவர் தற்போது தெற்கு டெல்லியில் உள்ள அலக்னந்தா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
1980–ஆம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது.

அதன் பின்னர் 1983–ஆம் ஆண்டு குழந்தை பருவத்தைக்  காக்கும் இயக்கம் (பச்சன்  பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தைக்  கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்தார். குழந்தைகளுக்குக்  கல்வி இலவசமாக்கப்படவும்  குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், இவ்வியக்கம்  தீவிரமாகப்  போராடி வருகிறது.   இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை. - பணத் தேவைக்காக அவர்களின் குழந்தைப் பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை குறித்துத் தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்பாடுகள் தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதலைக்காகப் போராடிய இவர் பலமுறை பணமுதலைகளாலும் தொழிலதிபர்களாலும் தாக்கப்பட்டார்.அவரது மனைவி சுமேதா இவர்  எடுக்கும் முடிவுகள், முனைப்புகள், முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்.

  இவர் பெற்ற விருதுகள்:
  • ஆக்சனர்  அமைதி விருது  1994(ஜெர்மனி)
  • கென்னடி சர்வதேச  மனித உரிமைகள் விருது 1995(அமெரிக்கா )
  • பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது 1999 (ஜெர்மனி)
  • இத்தாலிய பாராளுமன்ற விருது 2007
  • அல்போன்சோ கோமின் சர்வதேச விருது 2008 ( ஸ்பெயின்)
  •  ஜனநாயக விருது 2009 (அமெரிக்கா )
நோபல் பரிசு பெற்றது குறித்து" குழந்தைகளின் உரிமைக்காகப்  போராடி வருபவர்களுக்குக்  கிடைத்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதையாகக்  கருதுகிறேன். சிறுவர்களின் நலனுக்கான எனது போராட்டம் தொடரும்"  இவ்வாறு சத்யார்த்தி தெரிவித்தார்.

லூசியா லெபோ.

தமிழர் பழக்கவழக்கங்கள் - விளக்கம்


நெற்றியில் பொட்டு:
பெண்கள் நெற்றியில் குங்குமம் அல்லது பொட்டு வைப்பது தமிழர் மரபாகும். நெற்றியில் இரண்டு புருவங்களுக்கும் நடுவிலுள்ள புள்ளி
'அஜ்னா சக்கரம்' என்றும்  விழிப்புணர்வுப்  புள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. நெற்றியில் பொட்டு வைக்கும் போது இந்த சக்கரம் தானாகவே தூண்டப்பட்டு ஒருவரின் பதற்றத்தைக்  குறைத்து மனத்தை அமைதிப்படுத்துகிறது.

மெட்டி:
 திருமணமான இந்துப்  பெண்கள் மெட்டி அணிவது  வெறும் அலங்காரத்திற்கு மட்டுமில்லை.  பெருவிரலுக்கு அடுத்த விரலில் தான் பெண்கள் மெட்டி அணிவார்கள். இந்த விரலில் இருந்து செல்லும் நரம்பு கர்ப்பப்பை மற்றும் இதயத்திற்கு நேரடியாகச்  செல்கிறது.மெட்டி அணிந்து  நடக்கும்போது இந்த நரம்பு அழுத்தப்படுகிறது. இதனால் கர்ப்பப்பை வலுவடைந்து, மாதவிடாய் இரத்த ஓட்டத்தைச்  சீராக்குகிறது . .
வணக்கம் :
 இரண்டு கைகளையும் ஒன்று சேர்க்கும் போது, உங்களின் விரல் நுனிகள் அனைத்தும் ஒன்று சேரும். அவை ஒன்றாக அழுத்தும் போது ப்ரெஷர் புள்ளிகள் செயல்படத்  தொடங்கும். இதனால் அந்த நபரை நீண்ட நாட்களுக்கு மறக்காமல் இருக்கச்  செய்யும்.

தரையில் அமர்ந்து உண்ணுவது :
 சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து  சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கிச்  சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு சீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு சீ ரணம் நன்றாக நடைபெறுகிறது.

விளக்கேற்றும் நிகழ்வு:
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையும் பொண்ணுமாக மணமகன் வீட்டுக்கு வரும்போது ஆரத்தி எடுத்ததும் வலக்  காலை எடுத்துவைத்து உள்ளே வருகின்ற மணமகளை நேரே பூசை  அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்ற வைப்பார்கள். எங்கோ பிறந்து, வளர்ந்து  வேறொரு வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வருகின்ற மணமகளானவள் தன்னிடமுள்ள நல்ல குணாதிசயங்களைக் கூறாமல் கூறுகின்ற பாவனையாகவே இந்த விளக்கேற்றும் நிகழ்வு முற்காலத்தில் தொடங்கி  வைக்கப்பட்டது. அதாவது வீட்டுக்கு வருகின்ற மணமகளானவள் ஐந்து முகங்களைக் கொண்ட குத்துவிளக்கை ஏற்றுவதன் மூலமாக பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, சமயோசிதபுத்தி, நல்ல விடயங்களில் வைராக்கியம் போன்ற ஐந்து நற்குணங்களுடன் இந்த வீட்டுக்கு வாழ   வந்திருப்பதைக்  குறிக்கிறது.

ஆரத்தி :
திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலை தூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது. 

  ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை இந்த  சூட்சுமப்  பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போவார்கள். அதனால்தான் திருஷ்டி  கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டிவிடுவது வழக்கம்..

ஆரத்தி எடுப்பதற்காக பயன்படுத்தும் பொருட்கள் மஞ்சள்,குங்குமம், வெற்றிலை, கற்பூரம்,நீர்.ஒருவரை தண்ணீரால் சுழற்றி திருஷ்டி கழிக்கும்போது அவர் மீதான அனைத்து வகை கண் திருஷ்டியும் அகன்றுவிடும்.இதனை நீர்வலம் விடுதல் என்றும் கூறுவர் ..
தொகுப்பு:
லூசியா லெபோ.