பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 30 avril 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். பரந்து, விரிந்த இந்த உலகு மிக அழகானது. கண்ணுக்கெட்டிய வரை மெல்லிய நீலத் துகில் போர்த்தியது போன்ற வானம், அது கரு மேகத் திரையிட்டிருந்தாலும் அதிலும் ஓர் கவர்ச்சி,  கூச வைக்கும் தன் கதிர்களால் புத்துணர்ச்சியூட்டும் கதிரவன், மேனி தழுவிச் செல்லும் இளங்காற்று, அசைந்தாடி மனதை ஈர்க்கும் செடி,கொடிகள், தன் பிரம்மாண்டத்தால் மலைக்க வைக்கும் அகண்டு கிளை பரப்பிய மரங்கள், ஆங்காங்கே தங்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயங்கச் செய்யும் மலர்கள், ஓசையின்றி நழுவிச்  செல்லும் நீரோடைகள், சலசலத்து ஓடி, பேரோசையுடன் வீழ்ந்து புரளும் அருவிகள், அணைக்க வருவது போல் அலைக்கரங்களை நீட்டும் ஆரவாரக் கடலலைகள் என எல்லாமே மனிதனுக்கு பிரமிப்பையும், மனதுக்கு இதத்தையும், மகிழ்ச்சியையும் தரவல்லவை!
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

திரு மதிவாணன் இரங்கற் கவிதை


சிரிப்பினிலே அணையுமொரு இனிமை கொஞ்சும்
சினந்தோரை உறவென்று கனிந்து மிஞ்சும்
உரிமையிலே தனக்கென்று சொந்தம் கொள்ளும்
உவகையிலே உலகனைத்தும் தனதாய் எண்ணும்
தரிப்பதுவும் எளிமையதாய்த்  தன்னைத் தாழ்த்தும்
தகைமையிலே எல்லாரின் மனமும் வாழ்த்தும்
வரித்தவரை வாரியிந்த வையமும் வாழ
வழியின்றி வந்தவழி அனுப்பி வைக்கும் !

மனம்போன போக்கெல்லாம் மனிதர் வாழும்
மன்பதையில் வாழ்வோரை மதித்துப் போற்றும்
இனம்காணல் கானலதே ! எனது என்ற
இறுமாப்பில் எள்ளுவோரின் நடுவே நின்று
தனம்தேடி அலையாமல் நட்பு நாடி
தன்வருத்தம் புறந்தள்ளி வாழ்ந்த அன்பு
நினதுசொந்தம் ! எங்களுள்ளம் தனிலே என்றும்
நிலைத்தேகி மதிவாணன் நன்றே வாழ்வார் !

வெற்றிபெற்ற வாழ்வெனவே மக்கள் சாற்றும்
மேன்மையெதும் பெறவேண்டா ! நல்லோர் உள்ளம்
பற்றிநிற்கும் பரிவினிலே பகிரும் பாச
பந்தத்தில் ஒட்டிநிற்கும் உறவே போதும் !
கற்றவரைக் கடந்துள்ளே உறையும் நாளும்
கூத்தனவன் அருள்தனையே நிறையாய்ப் பெற்ற
நற்பேறு பெற்றவராம் நண்பர் நித்தம்
நாம்பயில உலவிவந்தக் கவிதை அன்றோ !

திருமதி சிமோன்

இளங்கோவடிகள் தீட்டும் எழிலோவியங்கள்

(பிரஞ்சு-இந்தியக் கலை-இலக்கியப் பண்பாட்டுக் கழகம்
அத்திஸ்-மோன்ஸ் நகரில் 25.04.2015 அன்று நடத்திய
 'சிலப்பதிகார விழாவில்' ஆற்றிய உரையின் சுருக்கம். )

ஓவியமா? காவியமா?(காப்பியமா?)
இதில் எதைப்பற்றிப்  பேசுவது! இதுதான் என்னுள் தோன்றிய கேள்வி .ஓவியத்துக்கும் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவை இரண்டுமே நுண்கலைகளாகும்.
தான் வரைந்த காட்சியைக்  காண்பவர்களின் கண்ணில் நிறுத்தும் திறம் படைத்ததால் கண்ணுள்  வினைஞர் என்று ஓவியனைக்  குறிப்பிடுகிறது இலக்கியம். கோடு , புள்ளி, வண்ணங்கள் கொண்டு அழகிய சித்திரத்தைத்  தூரிகை கொண்டு  ஓவியன் தீட்டுகிறான். கவிஞனோ  தேர்ந்தெடுத்த சொற்களை ஓசை நயம்படக்  கவிதையாக வடிக்கிறான்.உவமை அணிகள் கொண்டு அவற்றை மேலும் அழகுபடுத்துகிறான், மெருகேற்றுகிறான். தொல்காப்பியத்தின் உரை ஆசிரியராகிய பேராசிரியர் 'கவி, கண் காட்டும்' என்கிறார்.
"painting is mute poetry and poetry a speaking picture" என்பார்கள். அதாவது ஓவியம் பேசாத கவிதை, கவிதை பேசுகின்ற ஓவியம்.
சிலப்பதிகாரம் என்னும் எழுத்தோவியத்தில் இளங்கோவடிகள்  தீட்டியுள்ள    ஓவியங்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

அரிய தகவல்கள்


நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய விலங்கு  ஆமை.கடலில் வாழும் ஆமைகள் முட்டை இடுவதற்கு மட்டும் கடலை ஒட்டிய நிலப் பகுதிக்கு இரவு நேரத்தில் வருகின்றன.முட்டையிலிருந்து  வெளிவரும் குஞ்சுகளின் மனத்தில் நிலத்தின் அமைப்பு, அங்கு நிலவும் காந்தப்புலம், அங்கு வீசும் நறுமணம் ஆகியவை பதிந்து விடுவதால், இந்தக் குஞ்சுகள் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்போது, தாங்கள் பிறந்த கடற்கரைப் பகுதிக்கே மீண்டும் முட்டையிட வருகின்றன. இந்த வியக்கத்தக்க செயல்பாட்டை ‘Natal Homing' என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)