பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 juillet 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

நம்புகிறோமோ இல்லையோ, சில அறிவுக்கு பொருந்தியும் பொருந்தாமலுமான நம்பிக்கைகள் உலகில் உலவிக்-கொண்டிருப்பது உண்மை. அதில் முக்கிய இடம் பெறுவது ஜாதகம், ஜோசியம், எண் அல்லது இலக்க ஆராய்ச்சி போன்றவை. இந்தியர்கள் இவற்றில் மிகத் தேர்ந்தவர்கள்.  உதாரணமாக பூமத்திய ரேகையை சூரியன் கடக்கும் தினங்கள் வழக்கமான தேதிகளுக்கு முன்னதாகவே நிகழ்வதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே. இந்நிகழ்ச்சி 25827 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது என்றும் கணக்கிட்டுள்ளனர்!

இசை எப்படி ஏழு சுரங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதோ, நிறச்சேர்கைக்கு எப்படி ஏழு வர்ணங்கள் இன்றியமையாததோ  அதுபோல் நமது கணக்கீடுகள் எல்லாவற்றிக்கும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் அடிப்படை. படைப்புச் சக்தி பொருந்திய ஏழு கிரகங்களும்  காந்தசக்தியை வெளியிடுகின்றன. அவை பூமி முழுவதும் பரவுகின்றன. இந்து, சீன, எகிப்திய, கிரேக்க, ஹிப்ரு இரகசிய போதனைகள் ஒவ்வொன்றிலும் "7"  மறைவான தன்மை கொண்ட தெய்வ சக்தியைக் குறிப்பிடுகிறது. "1 " என்னும் எண்ணை முதல் காரணம் அல்லது கடவுள்  என்று  கொண்டால், முடிவற்றது என்பதனை வட்டம் அல்லது பூஜ்யம் எனக் கொள்ளலாம். 1 +0  என்பது 10 ஆகிறது. எத்தனை பூஜ்யங்களை அடுக்கினாலும் மறைபொருள் எண்ணான ஏழால் வகுத்தால் 27  அதாவது 2 + 7  = 9  கிடைக்கும்.

"9 " கிரக மொழியில் உலகப் பொருட்களுடன் தொடர்பு உள்ளதாக இருக்கிறது. கிரக வீதி ஒவ்வொன்றும் 30 ° அளவுடைய 12  பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொரு பிரிவினாலும் பூமி மாற்றம் கொள்கிறது. நட்சத்திரக் கோடுகளின் பொருள்: சூரியனிடமிருந்து அல்லது கடவுளிடமிருந்து உயிர் தோன்றி, முறையே சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்குச் செல்கிறது. சனி மரணத்தின்  அடையாளம். சனியிடமிருந்து உயிர் சூரியனிடம் அல்லது கடவுளிடம் செல்கிறது. வாழ்வெனும் சங்கிலியின் கணுக்களாக பிறப்பும், இறப்பும் நிகழும; மணிகள்,நாட்கள்,மாதங்கள்,ஆண்டுகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றுக்கும் உரிய எண்ணும்,இடமும் அளிப்பது சிந்தனைக்கு உரியதாகவேப் படுகிறது.

திருமதி சிமோன் 

இன்றைய அறிமுகம்



பெருந்தலைவர் காமராஜ்


தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த இவர் "கர்ம வீரர்", "கிங் மேக்கர்"என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். இராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி கிராமத்தில் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1903  ஜூலை 15 ஆம் தேதி பிறந்தார். 6 வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சுதந்திர உணர்வும், நாட்டுப்பற்றும்,மக்கள் மீது கொண்டஅக்கறையும் அவரை "படிக்காத மேதை"யாக, காமராஜர ஆட்சி திரும்ப வராதா என்று எல்லோரையும் ஏங்f வைக்கும் விதமாக உருவாக்கியது. நேர்மையும், எளிமையும் கொண்ட அவர் காந்திஜியின் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டு, 1930 இல் அலிப்பூர் ஜெயிலில் இரண்டு வருடம் இருந்தார். 1940 இல் வார்தாவுக்குச் சென்று சத்தியாக்கிரகிகளின் பெயர்களை காந்தியிடம் சமர்ப்பிக்கச் சென்றபோது கைதாகி வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் வென்றுசேர்மன் ஆனார். ஆனால் தன் மனச்சான்றுக்கு அது ஏற்காத தால் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" எதிர்ப்பில் மீண்டும் 3 வருடங்கள் அமராவதி சிறையில் இருந்தாலும் தன் அறிவைவளர்த்துக்கொள்ளும் வகையில் பல புத்தகங்களைப் படித்து நாட்களைப் பயனுறக் கழித்தார்.

1945 இல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி ப்ரெசிடென்ட் ஆனார். அவரது குரு சத்தியமூர்த்தி மூலம் மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலர் ஆகவும் இருந்து கட்சியைப் பலப்படுத்தினார்.1954 முதல்  9 ஆண்டுகள் தமிழக முதலமைச்சராகவும், 1952 - 54 , 1969 -75 பார்லிமென்ட் உறுப்பினர் ஆகவும் பணியாற்றினார். இந்தியதேசிய காங்கிரஸ் முதுகெலும்பாக இருந்து 1964 இல் லால் பகதூர் சாஸ்திரியையும், 1966 இல் இந்திரா காந்தியையும் நாட்டின் பிரதமராக்கினார். வயதானவர்கள் பதவி விலகி கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அவரது கருத்து "காமராஜர் பிளான்" என்றே அழைக்கப்பட்டது.
காமராஜர் தம் ஆட்சிக் காலத்தில் செய்த நன்மைகள் எண்ணிலடங்காதவை. அவரை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூரத் தக்க வகையில் ஆற்றிய பணிகளில் சில:
ராஜாஜி காலத்தில் மூடிய 6 ,௦௦௦ பள்ளிகளை மீண்டும் திறந்து, மேற்கொண்டு 12 ,௦௦௦ பள்ளிகளை (உலகிலேயேமுதன் முறையாக) திறந்தார்!  மொத்தம் இருந்த 12 ,௦௦௦ (7 %) பள்ளிகள் இவராட்சியில் 27 ,௦௦௦ (37 %) பள்ளிகளாக உருவெடுத்தன! ஏழை குழந்தைகளின் வயிற்றுப் பசியையும் போக்க "இலவச மதிய உணவுத் திட்டம்" கொண்டு வந்தார்! படிப்பும், உணவும் அளித்தாலும் கல்வித்தரமும் உயர்ந்து இருக்க வேண்டும் என்று வேலை நேரத்தை 180  மணியில் இருந்து 200  மணித் துளிகளாக்கினார். 1959 இல் சென்னை ஐ.ஐ.டி. ஆரம்பிக்கப்பட்டது.

பாசன வசதிக்காக அவர் செய்த சேவை மறக்கமுடியாதது. கீழ் பவானி, மணி முத்தாறு, காவேரி டெல்டா, ஆரணி ஆறு, விஜய் டாம், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு டாம் போன்ற நீர்நிலைகள் புத்துயிர் பெற்றன! பவானி அணை 10  கோடி ரூபாய் செலவில் 207 ,௦௦௦ ஏக்கர் நிலத்தை கோயம் புத்தூரில் வளப்படுத்தியது. சேலம் மேட்டூர் கால்வாய் 40 ,௦௦௦ ஏக்கரையும், 30 கோடி செலவிட்ட பரம்பிக்குளம் ஆறு, மதுரை வைகை, வட ஆற்காடு சாத்தனூர் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையில் குளித்தன! மொத்தம் 150 லட்சம் ஏக்கர் நிலம் (இதில் 56 லட்சம் நிரந்தர நீர் வசதி படைத்தவை) தமிழனின் கிடங்கினை நிரப்பியது. இது மட்டுமல்ல! 2 ,௦௦௦ கிணறுகள் தோண்டப்பட்டன! 25 % விவசாயக் கடன் நெடுநாள் கெடுவோடு வழங்கப்பட்டது. தவணை முறையில் எண்ணெய் என்ஜின், எலெக்ட்ரிக் பம்ப் வழங்கப்பட்டன.

காமராஜர் ஆரம்பித்து வைத்த தொழில் துறைகளோ இன்னொரு பெரிய பட்டியல் ஆகும். நெய்வேலி சுரங்கம்,நீலகிரி  கச்சா பிலிம் தொழில், அறுவை உபகரண உற்பத்தி-கிண்டி,சர்க்கரை,பை-கார்போ-நெட், சிமெண்ட் தொழிற்சாலைகள், ரயில்வே கோச் பாக்டரி, பெரம்பூர்,மேட்டூர் பேப்பர் இண்டஸ்ட்ரி, ஊட்டி நெய்வேலி பவர் ஸ்டேஷன் என்று தமிழ் நாடு கண்ட மேன்மைகள் ஏராளம். காமராஜரின் எண்ணிலடங்கா நற்காரியங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத அரசு மிக உயர்ந்த பட்டமான "பாரத ரத்னா" விருதினைக் கொடுத்து கௌரவித்தது. சென்னை விமான நிலையம் "காமராஜ் டெர்மினல்" என்றழைக்கப்படுகிறது. "மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்" அவர் பெயர் தாங்கி பெருமை கொள்கிறது.

எனினும் சாமான்யர்கள் நெஞ்சில் அவர் இன்றும் நிலைத்து நிற்பதே அவருக்கு மக்கள் செலுத்தும் உண்மை அஞ்சலி. காந்திஜியின் சரியான வாரிசாக வாழ்ந்து காட்டிய திரு காமராஜர்2 - 10 - 1975 இல் புகழுடம்பு எய்தினார்.

திரு தேவராசு