பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 mai 2011

மதி விருந்து


பழிச் செயலும் அறச் செயலும் :

துன்பத்தை விளைக்கவல்ல செயல் கடமை
 சொல்லியுள்ளார் பழிச்செயல்கள் என்றுமேலோர்
இன்பத்தைக் காக்கவல்ல செயல்கள் எல்லாம்
 ஈதல் இசைபட வாழ்தல் இரண்டாலாகும்
அன்புக்கே அடிப்படை இச்செயல் கடமை
 அறமென்றார்  பேரறிஞர் அருந்தவத்தால்
நன்குத் தன்னறிவு நிலைஅறிந்து மக்கள்
 நலம் நாடி சிந்தித்து முடிவுகண்டு.

மெய்ப்பொருளே நான்  :

வேதத்தை  யான்படித்த தில்லை ஆனால்
 வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்
வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை
 வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்
பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்
 பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்
சோதிப்போர்  புலனறிவால் என்னைக் காணார்
 சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே.

வெறுப்பொழித்தல் :

விருப்பத்தை ஒழித்துவிட முயல வேண்டாம்
 வெறுப்பை ஒழித்தாலதுவே மேன்மை நல்கும்
விருப்பமே சீவனது இயக்கச் சான்று
 வெறுப்பு அறிவின் குறையை விளக்கும் ஆடி
விருப்பத்தை ஒழித்து விட்டால் வாழ்வு ஏது?
 விளைவறிந்து முறையோடு அளவாய்க் கொள்ளும்
விருப்பமே வாழ்வை வளமாக்கும் சிற்பி
 விருப்பம் அளந்தே விரும்பி வெறுப்பொழிப்பீர்!

வேதாத்திரி மகரிஷி


ஓம் சக்தி

அம்மா உன்றன் அடிமலர் பணிந்தேன்
ஆன்ம பலத்தை அளித்திட வேண்டும்!
இன்பம் வரினும் இன்னல் வரினும்
ஈந்தவள் நீயென இருந்திடல் வேண்டும்!
உள்ளத் தினுள்ளே உண்மை ஒளியை 
ஊட்டியே என்னை உணர்த்திடல் வேண்டும்!
எத்தனை உழைத்தும் என்றும் வாடும்
ஏழையின் வாழ்வில் ஏற்றம் வேண்டும்!
ஐம்புலன் காத்திடும் ஆற்றலும் வேண்டும்!
ஒன்றே குலமெனும் ஒப்பிலா மந்திரம்
ஓங்கியே உலகில் ஒலித்திடல் வேண்டும்!
ஔவை வேண்டிய அருந்தமிழ் மூன்றும் 
அக்கம் மகிழ்ந்தெனக்கு அருளிடல் வேண்டும்!

சரோசா தேவராசு