பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 août 2011

எண்ணப் பரிமாற்றம்


Afficher l'image en taille réelleஅன்புடையீர்,

இந்த உலகில் என்று வந்து விழுந்து
விட்டோமோ அன்றிலிருந்தே உணவு
என்பது உயிர் வாழவும், உடலை வளர்க்
கவும் இன்றியமையாததாகி விட்டது.
ஆனால் அதை எப்படி, எப்போது, ஏன்,எதற்காக
உண்ணவேண்டும் என்பதில் ஏற்படும் அறியாமையிலும்,
குழப்பத்திலும் தான் நலம் கெட்டு, பற்பல நோய்களுக்கும் 
இரையாகி வருந்துகிறோம்.

விரும்புவதை உண்பதை  உடலுக்கு உடல் உள்ள 
வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அதனால்
ஒருவர் சாப்பிடுவது மற்றவருக்கு விஷமாகிறது.
மருத்துவரிடம் சென்றாலொழிய விளக்கம் கிடைப்ப-
தில்லை. மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதால்
பல வேளைகளில் அவர்களாலும் உரிய காரணத்தைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை!

எனவே, யாருக்கு உடல்   சொந்தமோ, அவர்களே
தங்கள் வயிறு எதை ஏற்கிறது, எதை புறம் தள்ளு-
கிறது என்பதைக் கண்டுணர்வது அவசியமாகிறது.
எந்த உணவு, எதைக் கொண்டுள்ளது, அதன் பயன்-
பாடு என்ன என்பதை தெரிந்து கொண்டால் நம்
வயிறு ஏன் அதைத் தவிர்க்க விழைகிறது என்பதும்
புரிந்து விடும். ஜீரணிக்க இயலாத ஒன்றை ருசிக்காக
உண்பதை விடுத்து, கவனமாக இருந்தால் வாழ்வில்
சுகமும் கூடும், சுவையும் கூடும்.

சிற்சில சுவைகளின் தன்மை பற்றியும், உணவுப்
பொருட்களின் கூட்டுப் பொருள்கள் பற்றியும்
தரப்பட்டுள்ள விளக்கங்கள் பயனுள்ளவையாக
இருக்கும் என்று நம்புகிறோம்.

திருமதி சிமோன்