பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 31 mars 2015

நான் ஏன் எழுதுகிறேன் !


நான் ஏன் எழுதுகிறேன் !

(மா-மா-காய்)
ஊழிக் கால முதற்கொண்டே
ஓம்பும் தமிழின் சீர்கண்டே
பாழி னின்று பாருலகை
பாது காத்து மீட்டிடவே
ஆழிப் பதிய உற்றவற்றை
ஆக்கி யளிக்கும் உத்தமரை 
வாழி யென்றே வாழ்த்தவரும்
வள்ளல் பலரும் வாழ்கின்றார் !

கன்னல் தமிழில் காவியத்தைக்
கவரும் வண்ணம் காட்டுகின்றார்
மின்னல் போல வண்ணங்கள்
மிளிரக் கண்டேன் கவிதையிலே
தன்னை மயக்கும் தாலாட்டில்
சொல்லத் தவிக்கும் தாபங்கள்
என்னை வெல்லும் கற்பனையில்
எண்ணத் தொலையா இன்பங்கள் !

இன்பத் தொல்லை தாளாமல்
ஏடு தொட்டேன் பாத்தீட்ட
துன்பம் தீர்க்க வல்லானை
தொழுது வடித்தேன் எண்ணத்தை
என்னில் முளைத்த விதைகளிலே
ஏகும் குறைகள் ஆயிரமே 
தன்னில் மயங்கும் என்மனதோ
தவறா தேற்கும் அவைகளையே !

கானில் நிறையும் தளிர்போல 
கவிஞர் பலரும் எழுதுகின்றார்
வீணில் நானேன்  எழுதுகிறேன் 
விடையே இல்லாக் கேள்வியிதே 
ஊனில் உருகும் தமிழின்பால்
உள்ளக் காதல் பிடிப்பாலே
தேனில்  ஊறும்  களத்தினிலே
தயங்கி நானும் கால்பதித்தேன் !

போற்றிப் புகழ ஆள்வேண்டாம்
புலவர் என்னும் பேர்வேண்டாம்
காற்றில் கரைந்தே என்கவிதை
கானல் போலே மறைந்தாலும்
சேற்றில் மலரும் தாமரையாய்ச் 
செழித்த என்றன்  மனவரங்கில்
நாற்றாய் நின்றே அசைந்தாடி
நல்கும் இன்பம் பலகோடி !

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire