சிரிப்பினிலே
அணையுமொரு இனிமை கொஞ்சும்
சினந்தோரை
உறவென்று கனிந்து மிஞ்சும்
உரிமையிலே
தனக்கென்று சொந்தம் கொள்ளும்
உவகையிலே
உலகனைத்தும் தனதாய் எண்ணும்
தரிப்பதுவும்
எளிமையதாய்த் தன்னைத் தாழ்த்தும்
தகைமையிலே
எல்லாரின் மனமும் வாழ்த்தும்
வரித்தவரை
வாரியிந்த வையமும் வாழ
வழியின்றி
வந்தவழி அனுப்பி வைக்கும் !
மனம்போன
போக்கெல்லாம் மனிதர் வாழும்
மன்பதையில்
வாழ்வோரை மதித்துப் போற்றும்
இனம்காணல்
கானலதே !
எனது
என்ற
இறுமாப்பில்
எள்ளுவோரின் நடுவே நின்று
தனம்தேடி
அலையாமல் நட்பு நாடி
தன்வருத்தம்
புறந்தள்ளி வாழ்ந்த அன்பு
நினதுசொந்தம் !
எங்களுள்ளம்
தனிலே என்றும்
நிலைத்தேகி
மதிவாணன் நன்றே வாழ்வார் !
வெற்றிபெற்ற
வாழ்வெனவே மக்கள் சாற்றும்
மேன்மையெதும்
பெறவேண்டா !
நல்லோர்
உள்ளம்
பற்றிநிற்கும்
பரிவினிலே பகிரும் பாச
பந்தத்தில்
ஒட்டிநிற்கும் உறவே போதும் !
கற்றவரைக்
கடந்துள்ளே உறையும் நாளும்
கூத்தனவன்
அருள்தனையே நிறையாய்ப் பெற்ற
நற்பேறு
பெற்றவராம் நண்பர் நித்தம்
நாம்பயில
உலவிவந்தக் கவிதை அன்றோ !
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire