பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 21 mai 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்ற புள்ளி விவரத்துக்கும், மூவாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ எதிர்ப்புகளையும், அழிவுகளையும் மீறி, செழித்து நிற்கும் தமிழ் அழிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கைக்கும், நிகழ் கால பிற கலாச்சாரங்களின் தாக்கத்தால் இது நடக்குமா என்ற ஐயத்துக்கும் நடுவே நாம் வாழ்ந்து வருகிறோம்.

அடுத்தத் தலைமுறைக்கு இச்செல்வத்தை எப்படி கொண்டு செல்வதென்பது தமிழ் ஆர்வலர்களின் ஓயாத சிந்தனை என்றால் அது மிகையாகாது. அதற்கான பல முயற்சிகளில் பலரும் முயன்ற வண்ணம் உள்ளனர்.

சுவிசு நாட்டின் அட்லிஸ்வில் நகர் முருகானந்தா தமிழ்ப் பாடசாலையின் திருக்குறள் மகாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. கடின, இணைந்த உழைப்பில் உருவான அந்த விழா அனைவரையும் கவர்ந்ததுடன், தக்க முறையில் செயல்பட்டால் வருங்காலச் செல்வங்கள் தமிழ் மொழியிலும், தாய்நாட்டுக் கலைகளிலும், அதே நேரத்தில் புலம்பெயர்ந்த நாட்டின் மொழியிலும் பிரகாசிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

பங்கேற்ற பிரான்சு கம்பன் கழகத்தினர் தங்கள் கவியரங்கத்தின் மூலம் விழாவிற்குச் சிறப்பு சேர்த்தனர்.

கடந்த மாதம், உடல் நலம் காக்க ஒரு சில குறிப்புகளைப் பார்த்தோம்.இம்முறை, உடல் நலத்துக்கான உணவு வகைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

-- இராசேசுவரி சிமோன்