பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 11 septembre 2010

அறிஞர்களின் அருள்வாக்கு

ஸ்ரீ சத்ய சாயிபாபா

பற்றற்றத் தன்மையைச் சிறிது சிறிதாகப் பழகிக்கொள். ஏனெனில் மிகவும் நேசிக்கிற அனைத்தையுமே விட்டுவிட வேண்டிய வேளை ஒன்று வரும்.

பறவையின் சுமையால் கிளை ஆடலாம். அதனால் பறவை நிலைகுலைந்து விடுவதில்லை. ஏனெனில் அது தன் பாதுகாப்புக்குத் தன் சிறகுகளையே நம்பியிருக்கிறது. அத்தகைய நம்பிக்கையைப் பெற வேண்டும்.

ஸ்ரீ அன்னை

முழுமையின் பாதையில் முன்னேற விரும்புபவன் இடர்கள் பற்றிக் குறை கூறலாகாது. அது பலவீனத்தின் அறிகுறி.

இன்னல்களை எதிர்பார்க்காதே. அது அவற்றை வரவழைக்கவே செய்யும். இன்னல்களை வெல்வதற்கான வலிமை ஒரு புன்முறுவலில்தான் உள்ளது.

துறவுக்கும் அடிமைப்படலாகாது. வருவதை ஏற்றுக் கொள்ளவும், இழக்கவும் சித்தமாக இருக்க வேண்டும்.

அமிர்தானந்தமயி

தங்களுடைய ஆசைகள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற பேராவலாலும், பொறுமையின்மையினாலும் மக்கள் குருடர்களைப்போல் நடந்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் தெளிவான கண்ணோட்டத்தை இழக்கின்றனர். அது பேரழிவில் முடிகிறது.

ரஜனீஷ்

இளகிய மனநிலையில், சுதந்திரமாக, வெளிப்படையாக, புதிய அனுபவங்கள் பெறத் தயாராக, புதுமைகளைக் கண்டறியும் ஆவலுடன் இருங்கள். அந்த உலகுக்காக இதையோ, இந்த உலகிற்காக எதையுமோ துறக்க வேண்டாம். எங்கே இருந்தாலும், என்னவாக இருந்தாலும் “நீங்கள்” வாழ வேண்டும்.

மனிதனைத் தவிர வேறெந்தப் பிறவியும் மரணத்தைக் கண்டு பயப்படுவதில்லை. மனதில் பயமிருந்தால் வாழ்வில் சந்தோஷம் எங்கிருந்து வரும்?

யோகி ராம்சுரத் குமார்

கடவுளை விட மேலானது நம்பிக்கை. மனதில் நம்பிக்கை இருந்தால் அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும். மரத்தைப் பராமரிக்க வேரில் நீர் விட்டால் போதும். ஒவ்வொரு இலைக்கும் நீர் விடவேண்டியதில்லை. வேர் கிளைகளுக்கும், இலைகளுக்கும் வேண்டியதைத் தந்து காப்பாற்றும்.