பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 décembre 2010

இன்றைய அறிமுகம்

  
கியூரி  அம்மையார் :

மேரி ஷிலேடோவ்ஸ்கா கியூரி  அம்மையார் உலகப் புகழ் பெற்ற சிறந்த விஞ்ஞானி. இவர் பௌதிகயியல் (Physics), வேதியியல் (Chemistry) - இரண்டு நோபல் பரி சுகளை வாங்கிய முதல் பெண்மணி ஆவார். பாரி ஸ்  பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரி யரும் இவரே. மேரி கியூரி  1867 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் பள்ளி ஆசிரி யர்களாகப் பணியாற்றியவர்கள். இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாரி ஸ்  நகரத்துக்கு வந்து அறிவியல் துறையில் பல பட்டங்கள் சோர்போன் (Sorbonne) பல்கலைக் கழகத்தில் பெற்றார். அத்தருணத்தில் பியர் கியூரி  (Pierre Curie) யுடன் ஒரே சோதனைச் சாலையில் வேலை செய்தார். இவர்களுக்கு 1895 -இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பௌதிகயியலில் தன் கணவர், மகள் இரேன் ஜோலியோ கியூரி , மருமகன் பிரெடிரி க் ஜோலியோ கியூரி  இவர்களுடன் நோபல் பரிசைப்   பகிர்ந்து கொண்டார். ஒரே குடும்பத்தில் அனைவரும் நோபல் பரிசு  பெற்ற பெருமையும் இவர்களையே சாரும். ஆனால் வேதியியலில் தனியாக 1911 -ஆம் ஆண்டு முதல் பெண்மணியாக நோபல் பரிசைப்  பெற்றார்.

மேரி கியூரி யின் ஆய்வு :

1896 -ஆம் ஆண்டு என்றி பெக்கரல் என்பவர் யுரேனியத்திற்கு வெளிசக்தி எதுவுமின்றி தன்னந்தனியாக கதிர் அலைகளைப் பரப்பும் சக்தி உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் மேரி கியூரி , பிட்ச்பிலண்ட் (pitchblende) , சாக்கோலிட் (chacolite) என்ற யுரெனியக் கனிமங்கள் இரண்டில் ஆராய்ச்சி நடத்தியதில், யுரேனியம் தவிர பொலோனியம் (Polonium) , ரேடியம் (Radium) என்ற பொருட்கள்  யுரேனியத்தைக் காட்டிலும் கதிர் அலைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும் என்று கண்டறிந்தார். 

மேரி கியூரி யின் புதிய கண்டுபிடிப்பான கதிர் இயக்கத்தன்மை (radiography)  விஞ்ஞான உலகில் திருப்பத்தை அளித்தது. இதன் மூலம் அணு என்பது ஒரு பொருளின் மிகச்சிறிய பாகம் என்பது அல்ல என்றும் ஒரு அணுவின் கதிர் அலைகள் புதிய பொருட்களையும் உண்டாக்கும் என்றும் நிருபிக்கப்பட்டன. மேலும் அணுவில் அதிக அளவு சக்தி அடங்கியிருக்கிறது என்பதும் மருத்துவத் துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் காண்கிறோம்.
கதிர் அலைகள் சம்பந்தப்பட்ட தம்முடைய ஆராய்ச்சியின்போது பாதுகாப்புச் சாதனம் எதனையும்; உபயோகப்படுத்தாததால் அவர் உடல் பாதிக்கப்பட்டு 1934 -ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

கியூரி  அம்மையாருக்குக் கிடைத்த பெருமைகள்:
இரண்டு நோபல் பரி சுகளைத் தவிர டேவி பதக்கம் (Davy medal), மெட்டச்சி பதக்கம் (Matteucci medal), இலியட் கிரஸ்ஸன் பதக்கம் (Elliott Cresson medal) போன்றவற்றையும் பெற்றார்.
பிரஞ்சு லெழியோன் தொன்னர் (French Legion of Honor) பெற்றார்.
பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கி இவரைக் கௌரவித்தன.
புகழ் பெற்ற பாந்தேயோனில் (Paris Panthéon) அடக்கம் செய்யப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார்.
போலந்து நாடு இவருடைய படத்தை நாணய நோட்டில் அச்சிட்டுக் கௌரவித்தது. பிரான்சில் 500 யுரோ நோட்டில் இவர் படம் அச்சடிக்கப்பட்டது.
இவருடைய பெயரைத் தாங்கிய  பல்கலைக்கழகங்களும்  நிறுவனங்களும் ஐரோப்பிய நாடுகளிலும்  அமெரிக்காவி லும் உள்ளன.

சுகுணா சமரசம்