பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 juin 2011

கே.பி.சுந்தராம்பாள்


தென்னக மேடைக் கலைஞர்.இந்தியநாடகராணி. இசைவாணி.சுதந்திர போராட்ட முதல் கலையுலகப் பிரஜை. தமிழ்த் திரை உலகில் முதன் முதல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை - இப்படிப் பல சிறப்புகளையும் ஒருங்கே பெற்றவர் திருமதி சுந்தராம்பாள்.

கொடுமுடி சுந்தரம் என்றழைக்கப்பட்ட இவர் 1908 இல் பிறந்தார். சிறு வயதிலேயே நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் அனைவரும் இவரைப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.பத்து வயதில் ஏழ்மைக் காரணமாக
ரயிலில் பாடி சம்பாதித்தார். ஊர்மக்கள் கோவிலிலும் பாடச் சொல்லிக்
கேட்பது உண்டு.

நடேச ஐயர் என்ற நாடக நடிகர், தயாரிப்பாளர், பின்னர் முனிசிபல் சேர்மன்
என்பவரும், போலீசில் வேலைபார்த்த கிருஷ்ணசாமி என்பவரும் சுந்தரத்-
திற்கு மிகவும் உதவ, சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு வேலு
நாயர் கும்பகோணம் அழைத்துச் சென்று தன் நாடகக் கம்பெனியில் நடிக்க
வைத்தார்.சிறுமி தன் பாட்டாலும், நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்தாள்.

1927 இல் தன்னுடன் நடித்த எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்து கொண்டார்.
இவர்கள் நடித்த 'வள்ளி திருமணம்', 'பவளக்கொடி', ஹரிச்சந்திரா' பெரும்
வெற்றியைத் தந்தன. 1931 ஆம் ஆண்டு தமிழின் முதல் பேசும் படமான
'மஹா கவி காளிதாஸ்'  மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இருவரும் காங்கிரஸ் அபிமானிகள் என்பதால், நாடக மேடையில் காதி உடுத்தி
சுதந்திர எழுச்சிப் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்பு ஊட்டினர்.

துரதிர்ஷ்டவசமாக கிட்டப்பா 1933 இல் மரணமடைந்தார். நடிப்பதை விட்டு
விட்டு சோகத்தில் இருந்தவரை, காந்தி அடிகள் நேரில் சென்று தேசப்பாடல்கள் பாட அழைத்தார். அதனால் மீண்டும் நடிக்க வந்த அவர்
செய்த சாதனைகள் அதிகம்.

அவர் நடித்த திருவிளையாடல்,அவ்வையார்,நந்தனார்,மணிமேகலை,
காரைக்கால் அம்மையார், கந்தன் கருணை,வீர சுந்தரி, பூம்புகார்,சக்தி லீலை, திருமலை தெய்வம், உயிர்மேல் ஆணை, துணைவன் படங்கள்
அவர் பாடிய பாடல்களால் ஓடியது என்றால் அது மிகையல்ல. பல பாடல்களின் இனிமை எல்லோரையும் பாட வைத்தது.

காங்கிரெஸ் தலைவர் சத்தியமூர்த்தியும்,காமராஜரும் அரசியலுக்கு அழைக்க, 1951  ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்ற மேல் சபை உறுப்பினர் ஆனார்.

பாட்டிற்காக இரு முறை தேசிய விருது பெற்றுள்ளார். 1964 இல் இசைச் சங்கம் 
"தமிழிசை பேரறிஞர்" என கௌரவித்தது.'70 இல்இந்திய அரசு கலைத் துறை-யில் 'பத்ம ஸ்ரீ' பட்டம் அளித்தது.

இன்று வரை இவர் பாடிய "பழம் நீ அப்பா", "வாழ்க்கை என்னும் ஓடம்",
சிறைச்சாலை என்ன செய்யும்" போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர
வைக்கின்றன.