பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 23 novembre 2011

பயனுள்ள செய்திகள்


பெயற் காரணம்

  •  ஆங்கிலத்தில் புலியை ‘டைகர்’ என்று அழைக்கிறோம். டைகர் என்ற பாரசீகச் சொல்லுக்கு அம்பு என்று அர்த்தம்.

  • நாவல் என்பது இத்தாலிய மொழிச் சொல். அம்மொழியில் நாவல் என்றால் கதை என்று பொருள்.
  • குடைக்கு ஆங்கிலத்தில் ‘அம்ப்ரெல்லா’ என்கிறோம். இலத்தீன் மொழியில் அம்ப்ரா என்றால் நிழல் தரும் என்று பொருள்.
  • வீடியோ என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் நான் பார்க்கிறேன் என்பதாகும்.

மரங்களின் வயது

மரங்களின் வயதை கண்டறிய ஒரு எளிய முறையைக் கையாளுகின்றனர். பொதுவாக ஒரு மரத்தின் அடிப்பாகப் பகுதியை குறுக்காக வெட்டினால் அதன் நடுப்பகுதியில் இருந்து வெளி வட்டம் வரை அடுக்கடுக்காக பல வளையங்கள் காணப்படும். இந்த வளையங்களை வைத்து அந்த மரத்தின் வயதை கணக்கிடுகின்றனர்.
மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களைக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட உதவும் படிப்பின் பெயர்,’டெண்ட்ரோகுரோனாலஜி’.
வளர்ச்சி வளையங்கள்எனப்படும் அவை ஒவ்வோர் ஆண்டும் உருவாகின்றன. செழுமையான ஆண்டுகளில் அந்த வளையங்கள் சற்று பட்டையாகவும், வறட்சியான ஆண்டுகளில் அவை மெலிதாகவும் காணப்படும். எனவே அந்த வளையங்கள் மரங்களின் வயதை கண்டுபிடிக்க மட்டுமன்றி, குறிப்பிட்ட பகுதியில் ஓவ்வொரு பருவமும் எப்படி அமைந்திருந்தது என அறியவும் உதவுகின்றன. ‘டெண்ட்ரோகுரோனாலஜிபடிப்பை உருவாக்கியவர் ஏ..டக்ளஸ் என்ற விஞ்ஞானி ஆவார்.

இளம் சாதனையாளர்கள்

  • வில்லியம் மிட் என்பவர் தனது 14-வது வயதில் அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ் பெற்றார்.
  • விக்டர் ஹியூகோ தனது 15-வது வயதில் பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பினார்.
  • மாவீரன் அலெக்சாண்டர் 16 வயதிலேயே தனது தந்தையின் போர்ப் படையில் தளபதியானார்.
  • விஞ்ஞானி கலிலியோ தனது 17-வது வயதில் பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்திலுள்ள விளக்கு இப்படியும், அப்படியும் ஊசலாடுவது ஏன்? என்பது குறித்து ஆராய்ந்தார்.
  • பீதோவன் தனது 21-வது வயதில் இசை உலகில் தன் பெயரை நிலை நாட்டினார்.


செயற்கை "கண்"

மனித உறுப்புகளில் மிக முக்கியமானது கண். இதிலுள்ள “கார்னியா” எனப்படும் விழி வெண்படலத்தின் மூலமே உலகில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் மனிதன் பார்த்து ரசிக்கிறான். சிலருக்கு பிறவியிலேயோ அல்லது விபத்தின்போதோ கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்படுவதுண்டு. உலகம் முழுவதும் சுமார் 4.9 மில்லியன் பேர் கார்னியா குறைபாடு உடையவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கு உதவும் விதமாக பிளாஸ்டிக்கால் ஆன செயற்கை கார்னியாவை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.
ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் ஆராய்ச்சிமையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோச்சிம் ஸ்டோர்ஸ்பெர்க் என்பவர், இந்த செயற்கை கார்னியாவை வடிவமைத்துள்ளார். ஹைட்ரோபோபிக் பாலிமர் என்ற பொருள்மூலம் இந்த கார்னியா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளானது கண் மருத்துவத்தில் நீண்ட காலத்திற்கு செயலாற்றக்கூடியது.
முதலில் பல்வேறு வகையான சிறப்பு பாலிமார்கள் செயற்கை கார்னியாவில் பூசப்படுகின்றன. பின்னர் அதன்மேல் சிறப்பு புரோட்டீன்கள் பூசப்படுகின்றன. இந்த புரோட்டீன்கள் கார்னியாவைச் சுற்றி உள்ள செல்களைத்தூண்டி, பார்வையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கார்னியாவை பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்க இன்னும் 3 ஆண்டுகள் தேவை என ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்துள்ளனர். 

முறுக்கலாம்.. வளைக்கலாம் ஸ்லிம்மோ ஸ்லிம் செல்போன்!


மிகமிக ஸ்லிம்மான செல்போனை சாம்சங் அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. ‘அமோலெட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போனை பேப்பர் போல முறுக்க, வளைக்க முடியும். சுத்தியலால் அடித்தாலும் வளைந்து கொடுக்குமே தவிர, உடையாது என்பது இதன் சிறப்பம்சம். தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் புதுப்புது வசதிகளுடன் கூடிய செல்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வளைத்தாலும் ஒன்றும் ஆகாத செல்போனை 2012-ம் ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. இதுபற்றி சாம்சங் இன்ஜினியர்கள் கூறியதாவது:
வளைத்தாலும் பாதிக்கப்படாத ‘பிளெக்சிபிள்’ செல்போனை உருவாக்க வேண்டும் என்பது சாம்சங் நிறுவனத்தின் நீண்ட கால கனவு திட்டம். அதன் வடிமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. ‘அமோலெட்’ என்று இதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன் நாலரை இஞ்ச் நீளம் இருக்கும்.  செல்போனின் தடிமன் வெறும் 0.3 மி.மீ. மட்டுமே இருக்கும். 1 ஜிபி ராம், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் திறன் கொண்டது. 8 மெகாபிக்சல் கேமரா வசதியும் உள்ளது. கிராபீன் கார்பன் பயன்படுத்தி ஸ்கிரீன் தயாரிக்கப்பட்டுள்ளது. சுத்தியலால் அடித்தாலும் உடையாது. இவ்வாறு சாம்சங் இன்ஜினியர்கள் கூறினர்.

 தொகுப்பு: லூசியா லெபோ