பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 juillet 2013

உறவுகள் உண்டாக்கும் உற்சாகம்

                                                         

உலகில் நாம் உற்சாகமாக வாழ ஒரு உயிரின் துணை இருந்தால் போதும். அது இல்லறத் துணையாகவோ, நட்புறாகவோ அன்றி ஒரு மாசற்றக் குழந்தையின் பாசமாகவோ கூட இருக்கலாம். ஏன், முற்றும் துறந்தவர்கள் கடவுளின் பந்தத்தில் உலகையே வெல்ல வில்லையா? சில வேளைகளில் காயப்பட்ட மனதுக்கு ஆறுதலாக இசையும், கவிதையும், பூவின் மணமும், தென்றலும், நிலவும் கூட இதமளிக்கின்றன. நாம் எந்த நேரத்தில் எதைப் பற்றிக்கொண்டு நம் மனதைத் தேற்றிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்து நம் நேரங்களின் தன்மை நிர்ணயிக்கப் படுகிறது.

பற்றிக் கொள்ளச் சில ஊன்று கோல்கள்:

"ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளி விடாதே! தளர்ந்து போகாதே. தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார். யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார். எனவே, தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்து. தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்து. நீ நேர்மையான பாதையில் நடந்து செல். அப்போது ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்".-திருமறை

"மனம் அடக்க முடியாதது. அலைபாயக் கூடியது என்பதில் ஐயமிலை. ஆனால் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் அதை வசப்படுத்தி விடலாம்."-கீதை

"நான்தான் எனும் மயக்கம் நண்ணுங்கால்,
       என் ஆணை வான்தான்
எனநிறைய மாட்டாய் நீ; ஊன்றாமல்
        வைத்த மவுனத்தாலே
மாயை மனம் இறந்து துய்த்துவிடும்
         ஞான சுகம்"-தாயுமானவர்

"பேய்போல் திரிந்து,
      பிணம்போல் கிடந்து
 பெண்ணைத் தாய்போல் நினைத்துத்
      தவ முடிப்பது எக்காலம்?"-பத்திரக்கிரியார்

"இல்லற வாழ்வில் இவ்வாறு ஏற்படவே செய்கிறது-சில சமயம் உயர்ந்த நிலை, சில சமயங்களில் தாழ்ந்த நிலை. சில வேளைகளில் நல்ல பக்தி. சில வேளைகளில் காமத்தில் மனம் உழலுகிறது. ஈயைப்போல சில வேளைகளில் இனிப்பின் மீது அமர்கிறது. சில வேளைகளில் அழுகிய புண்ணில், மலத்தில் கூட உட்கார்கிறது".- ஸ்ரீ ராமகிருஷ்ணர்


அலுத்துப் போனவனுக்குக் கடவுள் கல்லைத் தலையணை ஆக்குகிறார்-ஜெர்மன் பழமொழி 
கடவுள் என்ன கொடுக்கிறார் என்று புரிந்து கொள்வதே சிலருடைய பேறு-லத்தின் 
என் குற்றங்களைச் சொல்லவே கடவுள் ஒரு நண்பனை அனுப்புகிறார்-ஆங்கிலம் 
நாம் விரும்புவதைக் கடவுள் கொடுக்கவில்லை என்றாலும், நமக்குத் தேவையானதை அளிக்கிறார்-ஜெர்மன் 

காதல் இதயத்தில் இருந்தால் அழகு ஓர் பொருட்டல்ல. தூங்கும்போது தலையணை தேவையில்லை-பாஷ்டோ 
இன்பமில்லாதக் காதல் தாகமில்லாமல் அருந்தும் நீர், பசியில்லாமல் உண்ணும் உணவு-ஜெர்மன் 
உண்மையாக நீ காதலிக்கும் வரை உலகில் உன்னை எதுவும் வருத்தமுறச் செய்யாது-ஹங்கேரி 
குழந்தையைக் கையில் தூக்குபவன், தாயை இதயத்தில் ஏந்துகிறான்-செர்பியன் 

சிலர் உணர்ந்தவை:

நீ என்னருகில் இல்லை என்ற உணர்வில் 
நான் என்னிடம் இல்லை என்பதை 
நான் உணரக் கூட முடிவதில்லை! - ஜென்னி கார்ல் மார்க்ஸ் 

விதியில் எனக்கு நம்பிக்கையில்லை 
விழியில் உன்னைக் காணும்வரை 
நட்பில் எனக்கு நம்பிக்கையில்லை 
எனக்காக உன் விழிகள் கண்ணீர் சிந்தும்வரை 
உறவில் எனக்கு நம்பிக்கையில்லை 
நீ என் கைகளைப் பற்றும்வரை 
காதலில் இன்றுவரை நம்பிக்கையில்லை 
நீ என்ன செய்யப் போகிறாய் 
எனக்கு நம்பிக்கை வருவதற்கு!? - சின்னத்திரைத் தொடர் ஒன்றில் 

Aucun commentaire:

Enregistrer un commentaire