பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 novembre 2013

இயற்கையால் உடல் நலம்

                                                         
எந்நாட்டவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஓர் காரம் மிளகு. இயற்கை உடல் நலம் பேண நமக்களித்த ஒரு கொடை என்று கூடச் சொல்லலாம். பசியைத் தூண்ட, உணவைச் செரிக்க, உமிழ் நீரைச் சுரக்க, சுவாசக் கோளாறுகளை நீக்க, சிறு நீரைப் பெருக்க, சளியைப் போக்க என்று இதன் வேலைகள் உடலில் பலவாகும்.

மங்கனீஸ், விட்டமின் கே, இரும்புச் சத்து, நார்ச்சத்து நான்கும் இதில் நிறைந்துள்ளன.

பல்வலி: மிளகுடன் சிறிது நீரும், உப்பும் கலந்து பற்குழிக்குள் வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இருமல்: இரண்டு மூன்று மிளகை மென்று சாரை விழுங்கினால் போதும். காரம் தாங்காதவர்கள் பாலில் தூளாகக் கலந்து அருந்தலாம்.

வயிற்றுக்  கோளாறு: தண்ணீரில் மிளகுத்தூளைக்  காய்ச்சிச் சண்ட வைத்து குடிக்கலாம்.

வயிற்றுப் போக்கு: சாதத்தில் நல்லெண்ணையுடன் மிளகு கலந்து சாப்பிடலாம்.

சளி,தலைவலி: ஒரு மிளகை ஊசியில் குத்தி அதை அனலில் சுட்டு, வரும் புகையை நுகர வேண்டும்.

சிறு நீர் தொல்லை: அப்பகுதியில் எரிச்சல் இருந்தால், பாலில் வால்  மிளகை ஊற வைத்து, அரைத்து, அதே பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

மூலம்: ஆரம்பக் கட்டத்தில் மிளகு ஒரு பங்கு, பெருஞ்சீரகம் இரண்டு பங்கு கலந்து பொடியாக்கி, இரண்டு பங்கு வெல்லத்தூள் சேர்த்து தினம் இரண்டு வேளை  ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.


Aucun commentaire:

Enregistrer un commentaire