பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 novembre 2013

இயற்கையின் வேண்டுதல்

                                                     

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத்தான் நாம் இல்லாததாக்கி வருகிறோம். ஒரு சில விபரங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இதற்கு நமக்கு உரிமை இருக்க வாய்ப்பே இல்லை. ' வாடியப்  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் போன்ற அன்பு உள்ளங்களின் சேவைக்காக இயற்கைத் தவம் செய்து கொண்டிருக்கிறது.

மக்களின் வாழ்க்கை மரங்களில் தான் இருக்கிறதாம்.இந்த நூற்றாண்டின் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறுகிறார். ஏனெனில் அணைகள் கூடத் தேவையின்றி மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்கின்றன.

1. ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில் விளையும் ஆப்பிள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்ப 10 ஹெக்டேர் நிலத்து மரங்கள் வெட்டப்படுகின்றன. இதே ரீதியில் இன்னும் 10 வருடங்களில் ஆந்திரா, உத்திரப் பிரதேசம்,இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகியப் பகுதிகளில் காடுகளே இல்லாதொழியும்.

2. உலகில் வெட்டப்படும் மரங்களில் 12% சிகரெட் தயாரிப்புக்கு உபயோகிக்கப் படுகிறது.  

3. ஒரு மரத்தை வெட்டினால் இழப்பு 99.7% இலாபம் 0.3%

4. 50 டன் எடை, 50 வயதுள்ள மரம் ஒன்றை இன்னும் 50 வருடங்களுக்கு வெட்டாமல் இருந்தால், அந்த மரத்தால் ஈட்டக் கூடியத் தொகை 15 லச்சத்து 70 ஆயிரம் ரூபாய். ஒரு வருடத்திற்கு 1,000 கிலோ ஆக்சிஜனை அது தயாரிக்கிறது. ஒரு கிலோ 5 ரூபாய் என்றாலும் 50 வருடங்களுக்கு 2லட்சத்து 50 ஆயிரம். இன்னும் தண்ணீரைச் சேமிப்பது, மண் அரிப்பைத் தடுப்பது என்று ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயிக்கலாம்.

தற்கால வாழ்வில் பிளாஸ்டிக் இல்லையேல் வாழ்க்கை நகராது போல் தோன்றுகிறது. ஆனால் அது மக்கிப்போக எத்தனைக் காலம் ஆகும் என்றறிந்தால்  அறிவே நகராது நின்று போகும்:

வாழைப்பழத் தோல் - 2 முதல் 10 நாட்கள்
காகிதப் பை - 1 மாதம்
பஞ்சுக் கழிவு - 1 முதல் 5 மாதங்கள்
துணி - 5 மாதங்கள்
கயிறு - 3 முதல் 14 மாதங்கள்
டெட்ரோ  பாக்  - 5 ஆண்டுகள்
மரம் - 10 முதல் 15 ஆண்டுகள்
தோல் காலணி - 25 முதல் 40 ஆண்டுகள்
நைலான் - 30 முதல் 40 ஆண்டுகள்

பிளாஸ்டிக் - 10 லட்சம் ஆண்டுகள்!

ஏனெனில் கச்சா எண்ணையிலிருந்து பிரித்த நாப்தா என்ற பெட்ரோலியக் கழிவிலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது. (கலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் சூரிய ஒளி படும்போது அதிலுள்ள ரசாயனங்கள் நீருள் ஊடுருவுகின்றன. இதனால் புற்று நோய், மலட்டுத் தன்மை உள்ளிட்டப் பிரச்சனைகள் ஏற்படலாம்)






Aucun commentaire:

Enregistrer un commentaire