பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 16 octobre 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆனால் நம் மனம் கூறுகிறபடி வாழ்வதை, பிறர் எப்படி நோக்குகிறார்கள் என்பதே நமது வாழ்க்கையாக நமக்குக் கூறப்படுகிறது. பொதுவாக ஒருவன் இறந்த பிறகு அவனைச் சுற்றியுள்ள கூட்டத்தையும், அவர்களது அவனைப் பற்றிய விமர்சனத்தையும் பொறுத்ததே அவன் புகழ் என்பார்கள். இது மிக மோசமான கணிப்பு என்று ஒவ்வொரு முறை இதைக் கேள்வியுறும்போதும் எனக்குத் தோன்றும். இல்லையேல் இன்று மகாகவியாகவும், சீர்திருத்த, முன்னேற்றக் கருத்துகள் கொண்டவராகவும் போற்றப்படுகிற பாரதியார் அன்று உயிரோடு இருந்தபோது ஏழ்மையிலும், இறந்தபிறகு எண்ணக்கூடிய அளவிலான மக்கள்தொகையையும் கொண்டிருப்பாரா?

சமூகம் என்கிற நாலு பேரில், ஒருவர் தன் கருத்துகளை நியாயமான நேர்மையான முறையில் வெளிப்படுத்தி, அது தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்புக் கோருபவராக இருப்பதே அரிது. பெரும்பாலோர் மௌனம் சாதிக்கவும், வலுவான பக்கத்தைச் சார்ந்து நிற்பதையுமே வழக்கமாகக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மை என்பதற்காக அது சரியானதாகவும் இருக்கும் என்று எப்படிக் கூறமுடியும்?

நுாற்றாண்டுகள் பல கழிந்தும், மனிதன் எத்தனையோ விதங்களில்
முன்னேறியும், “வாழும் வகை” என்ற ஒன்றை மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மனிதனுக்கு மனிதன் அது மாறுபடுகிறது. எந்த சீவராசிக்கும் இல்லாத சிக்கல். அறிவிருக்கும் ஒரு காரணத்தினாலேயே பலவிதமாக வாழ்வைப் பின்னிச் சிக்கலாக்கி விடுகிறான். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எண்ணுகையில் தோன்றியவற்றையே கீழே தந்திருக்கிறேன்.

இராசேசுவரி சிமோன்