பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 14 janvier 2011

இணையமெனும் இனியவலை

இ மெயில் - மின்னஞ்சல்

அன்பான விசாரிப்புகளுக்காக,  செய்திகளைப் பரிமாறிக் கொள்ளக்  கடிதங்கள் எழுதப்பட்டன. கடிதம் எழுதுவதே தனிக்கலையாக இருந்த காலம் மாறி நினைத்தவுடன் உறவினருக்கோ நண்பர்களுக்கோ  அனுப்ப வேண்டிய செய்திகள்  சில நொடிகளில் சென்று சேரத்  தற்பொழுது மின்னஞ்சல்  இ-மெயில் பயன்படுகிறது. மின்னஞ்சல் என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். இதன் வழியாகத் தகவல்களை அனுப்புவது எளிதாகிறது. வீட்டில்,  அலுவலகம்,வெளியூர் , வெளிநாடு என்று எங்கிருந்தும் கணிணியில்  பார்க்கவோ பதில் கொடுக்கவோ விளக்கம் பெறவோ  ஏதுவான இலவசமான  ஒரே போஸ்ட்  மின்னஞ்சல்.  எனவே இமெயில் எனப்படும் மின்னஞ்சல் வசதியினைப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். வீட்டு விலாசத்தைவிட இ மெயில் முகவரியைக் கொடுப்பவர்கள்தான் அதிகம். இதனால் தனிநபர் உறவு வலுப்படுகிறது, காலவிரயம் தவிர்க்கப்படுகிறது.

வீட்டிற்குள்ளேய குடும்ப உறுப்பினர்கள்  தங்கள் எண்ணப்ரிமாற்றங்களை மின்னஞ்சல் வழியாக நடத்துகிறார்கள் என்றால் வியப்பாகவில்லை!  கணவரின் பிறந்த நாளுக்கு விருந்து தயாரிக்கும் அன்பு மனைவியரே (மின்னஞ்சல் அனுப்ப நீங்கள் அறிந்திருந்தால்) வீட்டைவிட்டு நகராமலே  இணையத்தின் வழியாக அழகிய வாழ்த்து அட்டைகளைத் தேர்ந்தெடுத்து உங்கள் கணவருக்கு அனுப்பி உறவின் பிணைப்பை வலுபடுத்திக் கொள்ளலாம். photo shop  பயன்படுத்த தெரிந்தவர்கள் உங்கள் கற்பனையில் வாழ்த்து தயாரித்துத் தமிழிலேயே மின்னஞ்சல் வழி வாழ்த்து அனுப்பி ஆச்சாரிய ஷாக் கொடுக்கலாம்.

வேறெதற்கெல்லாம் மின்னஞ்சல் பயன்படுகிறது என்ற உங்கள் ஐயம் எனக்குப் புரிகிறது.

மின்னஞ்சல் பயன்பாடு நமக்கு வெளி உலகை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் உலகின் எந்த மூலையிலிருந்தும் நண்பர்கள் கிடைப்பார்கள். (முகமறியாத) மின்னஞ்சல்வழி நட்பு வட்டத்தை ஏற்படுத்திக்கொண்ட நாங்கள் பிரான்ஸ், சென்னை, சிங்கப்பூர் ,  மலேசியா, துபாய்,  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் நேராகச் சந்திக்கும் வாய்ப்பு கோவை செந்தமிழ் மாநாட்டில் கிட்டியது மகிழ்ச்சியான செய்தி.

அலுவலக சம்பந்தமான சுற்றரிக்கைகள் போன்று ஒரே செய்தியைப் பலருக்கும் அனுப்பும் முறையை இது எளிமை படுத்துகிறது. இதனால் கால, பொருள் விரயம் தவிர்க்கப்படுகிறது

பிறந்தநாள், திருமணம்  போன்ற வைபவங்களுக்கு முன் கூட்டியே நமக்கு நேரம் கிடைக்கும்போதே வாழ்த்து தயாரித்துக் குறிப்பிட்ட நாளில் அவரவருக்குச் சேரும்படி அனுப்பும் வசதியும் இதில் உண்டு.

அலுவலகக் கோப்புகள், உங்கள் படைப்புகள், ஒளிப்படங்கள், போன்றவற்றைப் பெறவும் அனுப்பவும் எளிமையான ஆனால் துரிதமான வழி இது.

கருத்துக்  கணிப்பு - மின்னஞ்சல் கையெழுத்து வேட்டை - ஒருவருக்கோ ஒரு கருத்துக்கோ ஆதரவு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவும் பயன்படுத்தபடுகிறது. எடுத்துக்காட்டாக  மதுரைக் கோவிலை உலக அதிசயத்தில் ஒன்றாகச் சேர்த்தல் பற்றி, மாவீரர்களுக்கு மதிப்பளிப்பது உண்மையானால் ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் போன்ற விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காகத் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கியுள்ளது தமிழக அரசு. இதனால்  தற்போது 234 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளை முறையிடவும், விளக்கங்களைப் பெறவும் முடிகிறது.

மின்னஞ்சல் வழி சந்தைப்படுத்துதல் - என்பது  வணிக ரீதியான அல்லது நிதி திரட்டும் நோக்கங்களுக்காக மக்களுடன் தொடர்பு கொள்ளும் ஒரு நேரடி சந்தைப்படுத்துதல் முறைமையாகும்.
  ஒரு வணிகர் தமது வாடிக்கையாளர்களுடனான தமது உறவை மேம்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களைத் தேடுவது, பெறுவது, தங்கள் தொழிலுக்கு விளம்பரம் போடுவது போன்றவையும்  இதில் அடங்கும்.  
இணையம் வழியாக பொருட்களை வாங்க, விற்கவும் மின்னஞ்சல் சேவை இன்றியமையாதது.

இ மெயில் அனுப்ப என்ன தேவை?

அஞ்சல் என்றாலே  அனுப்புபவர், பெறுபவர் முகவரி மிகவும் அவசியம். தகவல் பரிமாற்றத்திற்கு ஒவ்வொருவருக்கும்  மின்னஞ்சல் கணக்கு ஒன்று கட்டாயம் தேவை. ஜிமெயில் - gmail,    யாகூமெயில் - yahoo> `hl;nkapy;> AIM மெயில் முதலியன ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல், பெறுதல் மிகப்பெருமளவில் நடைபெறுகிறது. எனவே இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ   பலவற்றிலோ நம் மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ள வேண்டும். மின்னஞ்சல்கள் தற்போது  உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் ஒருங்குறி (யுனிக்கோட்) முறையைப் பயன்படுத்துகின்றன.
    
மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் (அனுப்புபவரின் முகவரி, பெறுபவரின் முகவரி, செய்தியைப் பற்றிய தலைப்பு, கோப்பு சேர்க்கப்பட்டுள்ளதா போன்ற செய்திகள்) உள்ளடங்கியுள்ளன. உள்ளடக்கத்தில் செய்திகள் அடங்கும்.

எப்படிக் கடவுச் சொல்லை  (mot de passe)  தேர்ந்தெடுப்பது? 
 இமெயிலுக்கான கடவுச் சொல்லை (mot de passe)   அடுத்தவர் ஊகிக்க முடியாத வண்ணம் அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பெயர்,  பிறந்த நாள், உங்கள் பட்டப் பெயர், குழந்தைகளின் பெயர்கள், அவர்களின் பிறந்த நாள்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். மேல் நிலை, கீழ் நிலை (majescule, minscule)  எழுத்துகளையும் எண்களையும்  கலந்து அமைத்துக்கொள்ளலாம்.. குறைந்த பட்சம் 8 caractères  இருப்பது அவசியம். அதற்கு மேலும் இருந்தால் நல்லது. கடவுச்சொல் திருடர்களைத் திணறடிக்க இது உதவும். நினைவில் நிற்கக் கூடிய வகையில் கடவுச் சொல்லை அமைப்பது மிகவும் முக்கியம். அப்படியே மறந்துவிட்டால் கூட அதனை மீட்டெடுக்கும்  உதவிகளை உங்களுக்கு  மின்னஞ்சல் திறந்தவர்களைக் கேட்டுப் பெறும் வசதிகளும் உண்டு. கூடுமான வரை ஒவ்வொரு கணக்குக்கும் தனித்தனி கடவுச் சொல் வைத்திருப்பது நல்லது. நல்ல ஞாபகச் சக்தி கொண்டவர்களுக்கே இது சாத்தியம். நிறைய கடவுச் சொல் வைத்திருந்தால் எந்த கணக்குக்கு எந்த  கடவுச் சொல் எனத் தெரியாமல் குழம்பும் நிலை ஏறபடக்கூடும். எனவே விழிப்பாக இருங்கள்.

ஜிமெயில் மின்னஞ்சல் இப்போது தமிழில்!
முன்பெல்லாம் எ-கலப்பை, vd;.n`r;.எம். ரைட்டர் போன்ற மென்பொருட்களின் உதவியுடன்தான் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது மேற்குறிப்பிட்ட மென்பொருள்களின் உதவியின்றி   ஜிமெயிலில் மின்னஞ்சல்களை நாம் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பலாம். இதுபோன்று இந்திய மொழிகளான  ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஜிமெயில் வழங்கி வரும்  நல்ல சேவைகளில் இது குறிப்பிட தக்கது.
வளர்ந்துவரும் கணிணி தொழில் நுட்பத்தால் தற்போது  செல்பேசிகளிலும்  மின்னஞ்சலை பார்க்கும், அனுப்பும்; வசதியுள்ளது.

மின்னஞ்சல் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை, ஜிமெயிலில் தமிழில் மின்னஞ்சல் தட்டச்சு செய்வது எப்படி என்பவற்றை அடுத்தமுறை சொல்கிறேன். அதற்குள் மின்னஞ்சல் கணக்கு  இல்லாதவர்கள் உங்கள் கணக்கை ஆரம்பித்துக் கொள்வதுடன் உங்கள் நண்பர்கள் சிலரின் முகவரியையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

லூசியா லெபோ