பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 19 décembre 2011

கவிதை எழுத்து

பாரதியார்


அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

     அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின்மீது தனியர சாணை,

     பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே  நாட்டம்,  கரும யோகத்தில்

     நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்

     குலவிடு தனிப்பரம் பொருளே!



பாரதிதாசன்


நிலவு வராதா எங்கும் உலவி வராதா!

நிலவு கண்டால் என்முகம் அவன் நினைப்பில் வராதா!

அவன் மறதி தீராதா!

மலர் விரியாதா அங்கு மணம் பரவாதா!

மணம் நுகர்ந்தால் என்குழல் அவன் மனதைத் தொடாதா!

மறதி கெடாதா!

குயிலும் கொஞ்சாதா அவன் செவியில்  விழாதா!

குரலால் என்மொழி நினைவு கொஞ்சம் வராதா!

காதற் பஞ்சம் தீராதா!

வெயில் தழுவாதா ஒளி இருள் கழுவாதா!

வெயில் கண்டால் என் புருவம் விருப்பம் தராதா!

காதற் கரிப்புத் தீராதா!

மின்னல் வராதா அவன் கண்ணில் படாதா!

மின்னல் கண்டால் என் இருப்பின் மென்மை நினைப்பான்!

வெப்பந்  தணிப்பான்!

கன்னல் ஓங்காதா அங்குக் காட்சி தராதா!

கன்னல் கண்டால் என் உதட்டுக் கதை மறப்பானா!

இங்கு வர மறுப்பானா!



கண்ணதாசன்


ஜனனம் தொடங்கி, தனிவழி நடந்து

கோடை வசந்தம் மழைபல கண்டு

ஆடைகள் திருத்தி ஆசைகள் மாற்றி

கோடி நினைத்துக் குறையவே முடித்து

உண்ணல்  உறங்கல்  ஊடல் கூடல்

எண்ணல் எழுதல் இவைதான் வாழ்வெனப்

பாதி வழிவரைப் பயணம் முடிந்தது

மீதி வழியிலோ வியப்பும் திகைப்பும்!