பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 28 septembre 2012

வெண்மைப் புரட்சி



                                                 


இந்தியாவின் தேசியப் பால் பண்ணை மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர் வர்கிஸ் குரியன் என்பவர்  1970  -இல்  ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமான  இது உலகத்திலேயே மிகப் பெரிய பால் உற்பத்தித் திட்டமாகும்.  இது வெள்ளை நடவடிக்கை (Operation Flood)   என்று அழைக்கப்பட்டது.  பால் உற்பத்தியைப் பெருக்கும் முறைகளையும் பால் வீணாவதைத் தடுக்கும் உத்தியையும் விவசாயிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்.குஜராத்தின் ஆனந்த் நகரில் அவர் தொடங்கிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களால் பால் உற்பத்தி அதிகரித்தது.குஜராத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவரது வெண்மைப் புரட்சி நாடு முழுவதும் பரவியது. அக்காலத்தில் (1950)  இந்தியாவின் பால் உற்பத்தி நாள் ஒன்றுக்குச் சில ஆயிரம் லிட்டர்  அளவில் இருந்தது. இவரது முயற்சியால் ஒரு நாளைக்கு 90 இலட்சம் லிட்டர் என்ற பிரமாண்ட அளவை இந்தியாவின் பால் உற்பத்தி எட்டியது.  அமுல் பால் பொருள் உற்பத்தி நிறுவனம்  தோன்றியதும் இவர் முயற்சியால்தான். பல நாடுகள் பசும் பாலில் இருந்து மட்டுமே பால் பவுடர் தயாரிக்க, இங்கு எருமைப் பாலில் இருந்தும் பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது.இன்று நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகள் பால் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 200  -உக்கும் மேற்பட்ட  கூட்டுறவு பால் பண்ணைகள்  உள்ளன.
பால், வெண்ணை,  தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரிம், சாக்லேட் உட்படப் பல பொருள்களை அமுல் தயாரிக்கிறது.     அமுல் நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஆவின்,நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல நிறுவனங்கள் தற்பொழுது உள்ளன.
இந்தியாவின் வெண்மைப் புரட்சியின் தந்தை என்று போற்றப்படும் வர்கிஸ் குரியன் அவர்கள் தனது 90  -ஆவது வயதில்   09 09 2012 அன்று  குஜராத்தில்  இறைபாதம் சேர்ந்தார். இந்திய  குழந்தைகள்  ஒவ்வொருவரும் இவருடைய புகழ் கூறக் கடமைப் பட்டவர்கள்.    

லூசியா லெபோ 

Aucun commentaire:

Enregistrer un commentaire