பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 octobre 2012

கடலில் கலக்கும் நதிகள்

                                                       

இன்றைய உலகின் அமைதியைக் காப்பதில் மதங்களுக்குப்  பெரும் பங்கு உள்ளது. மதத்தலைவர்கள் இதை உணர்ந்து, தங்கள் பின்பற்றாளர்களை பரந்த மனதுடன் செயல்பட வைத்தார்களானால்  உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும். ஆனால் விசுவாசிகளை மறு பக்கம் திரும்பவிடாமல் காக்கவும்,மதத்தைப் பரப்பவும்,ஊடாடி இருக்கும் குறைகளைப் போக்கவுமே அவர்களுக்கு நேரம் போதவில்லை ! எனவே ஒவ்வொருவரும் தாங்களே சிந்தித்து, அலசி, எல்லா மதங்களின் குறிக்கோளும் ஒன்றுதான்; எல்லாம் பிரபஞ்சத்தை இயக்கும் மகா சக்தி ஒன்றைப் புரிய வைக்கவே முயலுகின்றன, எல்லோரும் "அன்பே கடவுள்" என்பதையே உணர்த்த விரும்புகிறார்கள் என்ற அடிப்படையை அறிந்து விட்டால், 'பேதம்' என்பதே இல்லாதொழியும் !

பஹாய்  நம்பிக்கை: ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் தோன்றி, மிக விரைவாக வளரும் ஓர் மதம். பஹா உல்லாஹ் என்ற பார்சிக்காரர் தோற்றுவித்தது.5மில்லியன்மக்கள்பின்பற்றுகின்றனர்.ஆபிரகாம்,கிருஷ்ணர்,மோசேஸ்,zoroaster,புத்தர்,கிறிஸ்து, முகமது என எல்லோர் கொள்கைகளையும் உள்ளடக்கியது. "ஒரே கடவுள், எல்லோரும் ஒன்றே" என்பதே இதன் சாரம்.

புத்தம் : இந்தியாவில் கி.மு.566-486 இல் புத்தரின் போதனையைப் பின்பற்றி தோன்றி, பரவியது. உலகைத் தோற்றுவித்த 'கடவுள்' பற்றிப் பேசுவதில்லை. இருக்கும் உலகில் 'வாழும் வகை' பற்றிக் கூறுகிறது. புத்தரையும் வழிபடாது வணக்கம் செலுத்துகின்றனர். "கெட்டதை விலக்கி, மனப்பயிற்சி மூலம் நல்வாழ்வு வாழ்ந்து, நிர்வாணமடைவது (ஞானமடைவது)" குறிக்கோள்.

கிறிஸ்துவம் :  இயேசுவின் வாழ்வு, அவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. முதல் நூற்றாண்டில் யூத மதப் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதால், அம்மத நூலை 'பழைய ஏற்பாடு' ஆகக் கொண்டுள்ளது. 2.1 பில்லியன் விசுவாசிகளை உள்ளடக்கியது. 33,830 உட்கிளைகளைக் கொண்டுள்ளபோதும்  கத்தோலிக்கமே உலகின் பெரிய மதமாக விளங்குகிறது. "கடவுளை அன்பு செய்; உன்னைப்போல் பிறரை நேசி" என்பதே இயேசுவின் அறிவுரை.

சைன மதக் கொள்கை:Shenism-Chinese folk என்று அழைக்கப்படும் 454 மில்லியன் கடைப்பிடிப்போரைக் கொண்டது. பாங்கு (Pangu) என்னும் படைக்கும் கடவுள் அல்லாது, அறிவு, செல்வம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அனைத்திற்கும் பெண் தெய்வங்கள் உட்பட பலர்  உண்டு. அவர்களை வணங்குவது மூலம், அந்த நலன்களைப் பெற்று உய்வதே பிறவிப் பயன் என்கிறது.

இந்து மதம்: 850 மில்லியன் பக்தர்களை உடைய உலகின் 3ஆவது பெரிய சமயம். இதைத் தோற்றுவித்தவர்களோ அன்றி நெறிப்படுத்தும் மைய அமைப்போ இல்லாதது.கி.மு. 1500 முதற்கொண்டே இருக்கும் வேத கால சமயம். பல்வகை நம்பிக்கைகளும், சடங்குகளும், சமய நூல்களும் உடையது. அன்பு, நம்பிக்கை,உறுதி கொண்ட எல்லா மதங்களும் ஒரே நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற எண்ணத்தால், பிற மத சகிப்புத்தன்மை கொண்டது. தனி மனித விருப்பு,வெறுப்பு கடந்து தூய உணர்வு பூர்வ அறிவியல் கொண்ட ஆன்மிக கொள்கையை 'சனாதன தர்மம்' அல்லது 'நிலையான தத்துவ ஞானம்' எனக் கொண்டு, "அறம், பொருள்,இன்பம்,வீடு" என்ற இலக்கை நோக்கி மனித குலத்தை வழி நடத்துகிறது.

இஸ்லாம்: 7ஆம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் தோன்றிய, கிறிஸ்துவத்திற்கு அடுத்து 180 கோடி மக்களால் பின்பற்றப்படும் மதம். யூதம்,கிறிஸ்துவம் போலவே அபிரகாம் வழி வந்த இதிலும் பல பிரிவுகள் உண்டு. திருக்குர்ஆன் கூறுவதுபோல வாழ்வில் நடந்துகொள்வதும், "கடவுளை ஏற்று, சரணடைய வேண்டும்" என்பதும் கொள்கையாகக் கொண்டுள்ள இவர்கள், எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவை என்னும் கருத்துடையவர்கள். இறைதூதர்களில் இறுதியானவரான முகம்மது நபிகளுக்கு இறைவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளே குரான் ஆகும்.

ஜைனம் : கிறிஸ்துவுக்கு  3000-3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இந்து கொள்கைகளான கடமை, நற்செயல் புரிதல், ஆன்மிக வழி நடத்தல் போன்றவைகளும், புத்த மதத்து அஹிம்சை போதனையும் கொண்டது. 24 தீர்த்தங்கரர்களால் வழி நடத்தப்படுகிறது. 12 மில்லியன் பின்பற்றாளர்களை உடைய இவ்வமைப்பின் 24வது கடைசி தீர்த்தங்கரர் 'மகாவீரர்'. இவர்களைப் பொருத்தமட்டில் பிரபஞ்சம் நிலையானது, அதற்கு அழிவில்லை. இந்தியாவில் சமணம் என்று சொல்லப்படும் இந்நெறி பற்றி சங்ககாலப் பாடல் உண்டு. இன்றும் சமண அறநெறிச் சிந்தனை தமிழக மக்களிடம் உண்டு.

எல்லா மதங்களிலும் தவறாமல், "உனக்குத் துன்பம் தருவதைப் பிறருக்குச் செய்யாதே, உனக்கு இன்பம் தருவதை மற்றவர்க்கும்  செய்" என்ற அறிவுரை கூறப்பட்டுள்ளது. இந்த ஒன்றை மட்டும் அனைவரும் பின்பற்றிவிட்டால், சொர்க்கம் இங்கேயே வந்துவிடும் !

திருமதி சிமோன்





Aucun commentaire:

Enregistrer un commentaire