பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 octobre 2012

தவறிய சமயப் பாதைகள்


                                                         

என்று உலகில் நல்லவை தோன்றியனவோ, அன்றே தீமைகளும் தோன்றிவிட்டன போலும்! மனிதனின் சபலங்களும், தான் என்னும் மமதையும், தவறான முடிவுகளும் எங்கே சென்று முடியும் என்பதை  சாமானியனுக்கு உணர்த்த  வேண்டும் என்பதற்காகவே இவற்றுக்கும் இடமளித்துவிட்டான் இறைவன். அப்படிச்  சில பாதை தவறிய  வழிகாட்டிகள் :

                                                             

மக்கள் கோயில்: 1955இல் ஜிம் ஜோன்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். கம்யுனிச தத்துவத்தை, மார்க்சியத்தை கிறித்தவ ஆலயங்களில் புகுத்தினார். முறைகேடுகள் நடப்பதாக அறிந்து அமெரிக்க காங்கிரெஸ் உறுப்பினர் லியோ ராயன் 17/11/1978 இல் அங்கே சென்றார். விசாரணைக்குப்பின் சில உறுப்பினர்களுடன் அவர் வெளியேறியபோது, கோயில் பாதுகாப்பினரால் சுடப்பட்டு, 3 ஊடகவியலார் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். அன்றிரவு சயனைடு பானம் அருந்தச் சொன்ன ஜிம் உள்ளிட்ட 918 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 270 குழந்தைகள்!  ஒரே நாளில் இயற்கை அழிவாலல்லாமல், போர் என்றில்லாமல்  இத்தனைப் பேர் தற்கொலையால் இறந்தது இதுவே ஆகும் !

                                                               

நித்தியானந்தர் : பரமகம்சர் பட்டம் பெற்ற நித்தியானந்தர் 34 வயதேயான இளைஞர். 12 வயதில் 'உடல் தாண்டிய அனுபவம்' பெற்று  . 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி இமயமலையில் தவம் செய்து, 1/1/2000 முதல் 'ஞான அநுபூதி' எனும் அடைமொழி அடைந்து, 'தியான பீடம்' என்னும் சேவை நிறுவனம் ஆரம்பித்தவர். இதற்கு 800 கிளைகள் 21 நாடுகளில் உள்ளன.

2010இல் நடிகை ஒருத்தியுடன் அவர் நெருக்கமாக இருந்த நிலை ஒளி பரப்பப் பட்ட பிறகு தலை மறைவானார். ஒரு மாதத்திற்குப் பிறகு கைதானபோது, 3 லட்ச ரூபாயும், 2000 டாலர் பயண காசோலையும் அவரிடம் இருந்தன. கர்னாடக ராம நகர மாவட்ட 'பிடதியில்' வன்முறையில் ஈடுபட்டு, பத்திரிக்கையாளர்களைத் தாக்கினார். 2 வழக்குகள் போடப்பட்டு, ஆசிரமமும் மூடப்பட்டது. இதற்குப் பின்னும் 292ஆவது மதுரை ஆதீனம் தனது வாரிசாக இவரை நியமிக்க, தற்போது மீண்டும் தலைமறைவாக உள்ளார். மதுரை மடமும் மூடப்பட்டுள்ளது. பக்தர்களை நம்பிக்கை மோசடி செய்ததாக பல ஊடகச் செய்திகள் உலா வருகின்றன.

                                                     

ஜெயேந்திரர்: ஆதி சங்கரரின் சமாதி மீது நிறுவப்பட்டுள்ள, தென்னிந்தியாவின் முதன்மை இந்து அமைப்பான காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது சங்கராச்சாரியாராக இருந்தவர். இம்மடம் பல பள்ளிகள்,    மருத்துவமனைகள் முதலியவற்றை இயக்குகிறது.1986இல் சங்கர மடத்தை விட்டு காணாமல் போய், ஒரு மாதத்திற்குப்பின் அழைத்து வரப்பட்டவர் இவர்.

இவரது சகோதரர் விசயேந்திர சரசுவதிகளும், இவரும் 2004இல் காஞ்சி  கோவில்    மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
2011இல் தமிழ் நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார்.

கடவுளின் பெயரால், அவர் சார்பில் மக்களை வழி நடத்துகிறோம் என்ற போர்வையில்  இன்னும் எத்தனையோ சந்தர்ப்பவாதிகள் தங்கள் சொந்த நலனுக்கு மக்களைப் பலியிடுகின்றனர். இறைவன் எங்கும் இருப்பதும், அவன் எல்லோருக்கும் அருள் வழங்கத் தயங்காதவன் என்பதும் உணரப்பட்டால், இந்த இடைத் தரகர்களின் கை ஓங்க வழியே இல்லை !

இவர்களை இன்னும் மத போதகராக மதிப்போர் இருக்கக் கூடும். சிந்தித்து முடிவெடுப்போர், தனி மனித சறுக்கல் என்று மன்னிக்கக் கூடும். இத்தகு நிலையைத் தவிர்த்திருக்கலாமே என்று ஆதங்கப் படுவோரும் இருக்கலாம். பலரும் வணங்கும் வகையில், உயர் பீடத்தில், மதப் பிரதிநிதிகளாக வலம்  வரும்  இவர்கள், நீதி மன்றம், தண்டனை என்பதற்குப் பதில், கடவுள் பக்தர்களாக, மனசாட்சியை மதிப்பவர்களாக இருப்பின், தாங்களே குற்றத்தை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதே, இவர்களும் வணங்கும் அந்த இறைவனுக்கு ஏற்பு !

திருமதி சிமோன்


1 commentaire: