பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

ஓவியப் பதுமைகள்

        




மேற்கும்-கிழக்கும்    

                                                   அஜந்தா மகளிர்                          

மோனலிசா


இயற்கையின் அழகுப் பெட்டகம் பெண்மை என்றால் மிகையாகாது. எந்தக் கலையும் அவளைத் தவிர்த்து நிறைவுறுவதில்லை . வாழ்க்கையில் எப்படியோ,  கலைஞன் என்ற நிலையில் மனிதனால் அவளை விடுத்து சிந்திக்க வேறு கருப்பொருள் இல்லை! தன் அன்பாலும், பண்பாலும், கனிவாலும் அவன் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றப் பெண்ணின் உறவை, உருவை அவனறியாமல் தன் படைப்பில் நிரந்தரமாக்கி விடுகிறான். அங்கு நிறமோ, உயர்-தாழ் நிலையோ பொருட்படுத்தப் படுவதில்லை. அழகு ஆராதிக்கப்படுகிறது.


இத்தாலி நாட்டினரான லியனார்டோ டாவின்சிக்கு  புகழைத்தேடித்தந்த ஓவியம் மோனலிசா .  நான்கு ஆண்டுகள் (1502 - 1506) ஆயிற்றாம் இந்த ஓவியத்தை வரைய.போப்ளார் பலகையில் வரையப்பட்ட எண்ணெய்  வண்ண ஓவியம் இது. மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்ற பிரெஞ்சு மன்னனுக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டது.பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collection -  ன் கீழ் உள்ளது.தற்பொழுது பிரான்ஸ் நாட்டில், பாரிஸ் நகரிலுள்ள உலக புகழ் மிக்க லூவ்ர் அருங்காட்சியகத்தில்  வையக்கப்பட்டுள்ளது.எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற மனக்காட்சியை ஊட்டக்கூடியது.  மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும். இப்பெண்ணின் சோகம் கலந்த புன்னகையின் மர்மம் என்னவோ?  இப்பெண்ணின் உண்மை பெயர். Lisa del Giocondo. இத்தாலி மொழியில் மோனா  என்றால்    மேடம் என்று ஆங்கிலத்தில் அழைப்பதைப் போன்ற மரியாதையான சொல்.அவருடைய உண்மையான பெயருடன் சேர்ந்து மோனலிசா ஆனது. இந்த ஓவியம் பற்றி  சுவாரசியமான பல  தகவல்கள் உண்டு.இந்த ஓவியம் திருடு போனதாகவும் பிறகு கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். இது ஒரிஜினல் இல்லை. நகல்தான் என்று சொல்பவர்களும் உண்டு.


                                                                   
                                                                             
                                                                 ரவி வர்மா


ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848- அக்டோபர் 2, 1906):  நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்  பாணி ஓவியக்கலைக்குள்  புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.நம் இதிகாசங்களில் உள்ள பல நிகழ்ச்சிகளையும் அவர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம்  ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன்  அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய்  வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868  இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன.

1873  இல் வியன்னாவில்  நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். நவம்பர் 24 2002 இல் டில்லியில்  நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு  ஏலம் போனது.


                                                                                                                            
                                                                   
                                            உலக சமாதானம் வேண்டுகிற முஸ்லிம் பெண் 
                                                                          (அதிக விற்பனை)



                                                                                                                                                                                                     
 ராஜஸ்தான் அழகி                                                                                     தஞ்சை அழகி


                                                             
                                                                 லேடி ஹாமில்டன்


                                                                                   
    நாணமும் நகையும்                                                                             கனியும்கன்னியும்


                                                                                    
      இன்றைய இளமை                                                                             நாளைய புதுமை 

Aucun commentaire:

Enregistrer un commentaire