பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

எண்ணப்பரிமாற்றம்

                                                                


அன்புடையீர்,

வணக்கம். உள்ளத்து உணர்வுகளையும், எண்ணச் சிதறல்களையும், கற்பனை வளங்களையும் எடுத்தியம்பாமல் மனிதப் பிறவியால் அமைதி காண முடியாது. அது இயலுமென்றால் உலகில் பேதங்களோ, முரண்பாடுகளோ, வன்மமோ அல்லது சண்டையோ இருக்காது. அவரவருக்குத் தோன்றுவதை வெளிப்படுத்துவதாலேயே பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் அதற்காக மனித குலம் மவுனம் சாதித்தால், ஒரு வகையில் உலகம் இருண்டு விடும். பேதங்களே வாழ்வுக்குச் சுவை கூட்டுகின்றன.

வெளிப்படுத்துவதிலும் மனிதன் கண்ட வகைகள் தன்னிகரற்றவை. இசையோ, நாட்டியமோ,சிற்பமோ,ஓவியமோ அதில் தானும் கரைந்து, நம்மையும் அதில் பிணைத்து விடுவது அவன் திறமைக்குச் சிகரமாக அமைந்து விடுகின்றது. இதில்  கண்ணால் காண்பதை உணர்வுடன் ஒன்றி காணும் வகை  ஆக்குவது ஓவியம். வரைந்தவனது கருத்து, அதில் அவன் பெற்ற உணர்வு, ஆழ்ந்து அதை ரசிக்கும் மனிதனையும் தொற்றிக்கொண்டு விடுகிறது.

தீட்டியவன் யாரென்றே தெரியாதபோதிலும், ஓர் அழகிய கவிதையில் மெய் மறந்துபோவதைப் போல சித்திரங்கள் நம் இதயத்தை ஆட்கொள்கின்றன. உலகத்து முன் உடல் மறைந்தாலும், தான் தீட்டிய ஓவியத்தின் வழி அவன் சிரஞ்சீவி ஆகிறான். தன்னில் ஒரு பாகத்தை, ஏன், தன்  முழுமையை பதிவு செய்துவிட்டே மறைகிறான்.

வான் வெளியில் ஒளிரும் அத்தனை மீன்களையும் இனம் காண இயலாதெனினும், மிளிரும் ஒருசில கண்கவர் சுடர்களைக் கண்டு களிப்போம்!

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire