பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 juin 2013

வியப்புச் செய்திகள்


                                                                 


பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைவிட ஐக்யூ (நுண்ணறிவுத் திறன்) அதிகமாக இருப்பவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனில் வசித்துவரும் நேகா ராமு எனும் 12 வயதுச் சிறுமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள ஒரு தனியார் அமைப்பு,  நுண்ணறிவுத் தேர்வை நடத்தியது. அந்தத் தேர்வில் நேகா, 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.  விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், பில்கேட்ஸ் இவர்களின் ஐக்யூ 160 தானாம். 

நம் அனைத்து உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்களை உள்வாங்கி அலசி ஆராயும் மூளைக்கு உணர்ச்சி கிடையாது. வலி உணராது. மூளையில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யும்போதுகூட, நோயாளிக்கு வலி துளியும் இருக்காது.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே கொட்டாவிப் பழக்கம் இருந்துவருகிறது. உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறதாம்.


 காதல் உணர்வு மனிதனுக்குள் பாயும்போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன அது மூளையின் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது என்பது  பெரும் புதிராகத்தான் இருந்து வந்தது.இந்த புதிரை லண்டன் பல்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி செமிர் ஜெகி தனது நீண்ட கால ஆராய்ச்சி மூலம் முறியடித்துள்ளார்.

மனித மூளையில் ´காதல் வங்கி´ (லவ் பேங்க்) என்ற ஒன்று அதிவேகமாகச் செயல்படுகிறது.மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் ஆண்-பெண் ஜோடிகளை காதல் வானில் சிறகடித்து பறக்க வைக்கிறது. காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது, பாராட்டும் போது, பரிசு கொடுத்து வாழ்த்தும் சமயங்களில்… காதல் வங்கியில் சேமிப்பு பல மடங்கு அதிகமாகிறது. அப்பொழுது  மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். படபடப்பு, டென்ஷன், கவலைகள் மாயமாகும். வாழ்க்கையில் எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைகளை அடித்து நொறுக்கும் அனாயச துணிச்சல் கிடைக்கும். இந்த மாதிரியான காதலர்கள் கடைசி வரை பிரியமாட்டார்கள்.காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றி நடைபோடுகிறது.

காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் போதும்,திட்டிக்கொண்டிருக்கும் போதும், சந்தேகப்படும் சமயங்களிலும் காதல் வங்கியில் சேமிப்பு மெல்ல மெல்ல குறைந்து விடும். இந்த சேமிப்பு முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டும்போது… காதல் வங்கியானது வெறுப்பு வங்கியாக மாறி விடுகிறது.இந்த´வெறுப்பு வங்கி´ மனித மூளையில் செயல்படும்போதுதான் ஒருவித பயம், நடுக்கம், கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுகிறது. வெறுப்பு வங்கி ஒரு மனிதனிடம் தொடர்ந்து செயல்பட்டால் மனநிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது.காதல் வங்கியில் ´பூஜ்ஜியம்´ இருப்பு உள்ளவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கடைசியில் விவகாரத்தில் போய் முடிகிறது.


சந்தன மரம் தனித்து வளராது. நீர், தாது உப்புக்களைத் தானாக பூமியில் இருந்து உறிஞ்சாது.தன்னை அடுத்துள்ள மரங்களில் தன்னுடைய வேரை ஊடுருவச் செய்து அவற்றிலிருந்து சத்துக்களைத் திருடிக்கொள்ளும். இது ஒரு ஒட்டுண்ணி மரம்.இந்த மரத்தின் அருகில் சென்றால் எந்தவிதமான வாசனையும் வராது.முதிர்ந்த மரங்களின் தண்டுப் பகுதியை அறுக்கும்போதுதான் வாசம் வெளிவரும்.

விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி .இதனால் சாதாரண ஒலியைக்கூட எழுப்பமுடியாது.

மீன்களுக்கு உமிழ்நீர் சுரப்பிகள் கிடையாது.


தொகுப்பு: லூசியா லெபோ

Aucun commentaire:

Enregistrer un commentaire