பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 juin 2013

விதி மாற்றும் இயற்கை

                                                            

உயிரினங்கள் வாழ இன்னின்ன அடிப்படைத் தன்மைகள் வேண்டும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் நாம் நினைக்கின்றத் தன்மைகள் அல்லாமல்  வேறுபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்ற பல உயிர்களை இயற்கை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில வேண்டுமானால்  பிழைபட்டப் படைப்புகளாய் இருக்கலாம். பெரும்பாலானவை இயற்கையின் விசித்திரங்களே! அவற்றில் ஒரு சில:

1. பாம்பு நாக்கு மூலம் வாசனையை உணர்கிறது.
2. கரப்பான் தலைத் துண்டிக்கப்பட்டு ஒன்பது நாட்கள் வரை வாழ இயலும்.
3. பட்டாம்பூச்சி கால்களால் உணவை ருசிக்கிறது.
4. பூச்சிகளின் ரத்தம் மஞ்சள் நிறமுடையது.
5. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட இரண்டு மடங்கு உடையது.
6. முதலை 300 ஆண்டுகள் கூட வாழும்.
7. பூனையின் பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
8. ஒட்டகம் ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள நீரையும் கண்டுகொள்ளும்.
9. கரையான் ஒரு நாளில் 30,000 முட்டைகள் இடும்.
10.நத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரைத் துயில் கொள்ள முடியும்.
11.மரங்கொத்தி ஒரு நொடியில் 20 முறைத் தொடர்ந்து கொத்த முடியும்.
12.பனிக்கரடிகள் இடக்கை வழக்கமுள்ளவை .
13.முதலைகளால் நாக்கை நீட்ட முடியாது.
14.பூனை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி போன்றவை வலது-வலது, இடது-இடது   
     கால்கள் என நடக்கும்.
15.காண்டா மிருகக் கொம்புகள் கடினமான மயிரிழைகளால் ஆனவை.
16.அனப்லஸ் என்ற மீனுக்கு 2 கண்களில் 4 விழித்திரைகள் உண்டு.
17.உண்ணி பனிக்கட்டியில் ஓராண்டுக்கு மேல் உறைந்திருந்து, பனிக் கரைந்த 
     பின் வெளி வந்து நடமாடும்.
18.கடும் வெப்பத்தில் நீர் யானை உடலில் இளஞ்சிவப்புத் திரவம் ஒன்று சுரந்து 
     குளிர்ச்சி தரும்.

மனித உடலிலும் இது போன்றத் தனிப்பட்ட சிறப்புகள் பல உள்ளன:

1. கண்களைத் திறந்துகொண்டு தும்ப முடியாது. தும்பும்போது இதயம் ஓர்
     மில்லி செகண்ட் நின்று பின் இயங்குகிறது.
2.மனிதக் காதுகள் 130 டெசிபெல் அளவு இரைச்சலைத்தான்
   பொறுத்துக்கொள்ள முடியும்.
3.முடியில் நரம்புகள் இல்லாதக் காரணத்தால் வெட்டும்போது       
     வலிப்பதில்லை.
4.உடலை அமைதிப்படுத்த, மூளை 11 வகை ரசாயனங்களை உடலெங்கும் 
    அனுப்புகிறது.
5.அழுவதைவிடச் சிரிக்கும்போது குறைவானத்  தசைகளையே பயன் 
    படுத்துகிறோம்.
6. கைரேகை போல நாக்கு ரேகைகளும் வெவ்வேறு வகையாக உள்ளன.
7. மனித விழிகள் பிறந்ததிலிருந்து வளர்வதில்லை.
8. சராசரி மனித விழி 200° வரைத் திரும்பும்.
9. குழந்தைகள் 6 மாதம் வரை மூச்சு விட்ட வண்ணம் உணவை 
    விழுங்குவார்கள்.
10. பிறந்து 2 முதல் 6 வயது வரை மூட்டுகள் திடப்படுகின்றன.
11.குழந்தை பிறந்து 8 மாதங்கள் வரை அழும்போது கண்ணீர் வராது.

தொகுப்பு: திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire