பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 13 juin 2010

இன்றைய அறிமுகம் -- ழான் தார்க்

பிரான்ஸ் நாட்டின் ஒப்பற்ற வீராங்கனையாகப் போற்றப்படும் ஜான், எளிய விவசாயக் குடும்பத்தில் 1412இல் பிறந்தாள். படிக்காத அந்தப் பெண், தன் தாய் நாட்டைக் காக்கக் கடவுள் தனக்கு ஆணையிட்டிருப்பதாக நம்பி, ராணுவத்தில் சேர முயன்றாள். மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிட்ட அவளைத் தவிர்க்க இயலாமல் இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.

17 வயதான அவள், பிரான்ஸ்-இங்கிலாந்து நடுவே 100 ஆண்டுகளுக்கு மேல் (1337-1453) நடந்துகொண்டிருந்த ஐந்து போர்களில், ஆணுடை தரித்து ராணுவம் முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிசயத்தக்க வெற்றிகளை அடைந்தாள்.

தலைமைப் பொறுப்பேற்ற அவள் எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம்.
பெண்ணைப் போர்க்களத்தில் ஏற்காத எதிராளிகளும், மதவாதிகளும் உண்டாக்கிய அவப்பெயரைப் போக்க, அவள் தன் கன்னித்தன்மையை நிரூபிக்க வேண்டியதாயிற்று!

ஜான் பெற்ற வெற்றியினால் அரசனான சார்லஸ் ஏழுக்கு எதிரானவர்கள் அவளை 10,000 பவுண்ட் காசுக்கு அவளுடைய 19ஆவது வயதில், 23-5-1430 இல் இங்கிலாந்து போர்வீரரிடம் பிடித்துக் கொடுத்தனர்.

அரசியல்ரீதியான பகைக்கு, மதத்திற்கு எதிரான கொள்கை உடையவளாக அவளைக் குற்றம்சாட்டி, 1431 மே மாதம் 30ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் மத அமைப்பு உயிருடன் அவளை எரித்துக் கொன்றது. அவள் மீது சாட்டப்பட்ட குற்றங்களில் சில-ஆணுடை அணிந்தது, சிறு வயதில் பெற்றோரை விட்டு வந்தது, புனிதர்கள் தனக்கு முன் தோன்றி நாட்டைக் காக்கச் சொன்னதாக தெய்வ நிந்தனை செய்தது போன்றவை.

மே மாத முதல் தேதி ஜான் தார்க்கின் நினைவு நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1456இல் போப் (ஸ்பெயின் நாட்டுக்காரர்) அவளைப் புனிதையாக அறிவித்தார்.

இராசேசுவரி சிமோன்