பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 29 avril 2011

இறைப்புகழ்


அஞ்ஞானத் தாலடியேன் ஆற்றுப்பிழை அன்புடனே 
மெய்ஞ்ஞானத்  தால்போக்கு மேலோனே - தஞ்சமென 
வந்தடைந்தேன்  உன்றிருமுன்  வள்ளலே செந்தூரா
பந்தமறத் தந்தாள் பதம்.

பற்றொன்று மில்லாப் பதடியேன் உன்புகழைக் 
கற்றறியாப் பேதையேன்  காசினியில் - கற்றவர்கள்    
 கண்டேத்து நின்றாளைக்  காண விழைந்திட்டேன் 
உண்டோவப்   பேறு எனக்கும் ஓது.

தத்துவம்முப்  பத்தாறும் தாண்டியதன் மேல்நிலையை 
நித்தியமாப்  பற்றும் நியதிதனைச்  - சித்தத்தே 
ஓதுவிக்கும் நாளின்றே ஓதிடுவாய் செந்தூரா 
மாதுமையாள் செல்வனே வந்து.

நோய்என்னைச்  சாருமுனம்  நொந்துமனம் தேயுமுனம் 
தாயென்ன வந்து தயைகாட்டி - தூயஅருள்
தந்தருள் நாள் எந்நாளோ சண்முகனே உண்முகத்தே
வந்தருள் நாள் எந்நாள் வழங்கு.

புலவர்  வி. அண்ணாமலை