பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 juillet 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                         


உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றான பிரான்சு தனக்கே உரித்தான பல உயர்வுகளைத் தன்னகத்தேக் கொண்டது.ஜனநாயக மூச்சான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை தன் அடையாளமாகக் கொண்டது. ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற சாதாரண ஆர்வத்தை விட, நாம் வசிக்கும் நாட்டின் சிறப்பை உணர்வது ஒரு சிறந்த குடிமகன்-மகளின் அடையாளம் என்பதாலேயே பிரான்சின் சிறப்புகளை நினைவு கூற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதன் செயலாக்கமே இந்த வலைப்பூவில் மலர்ந்துள்ளது.

இதமான காலச் சூழல். மலைகளும், காடுகளும், பச்சைப் புல்வெளிகளும், இயற்கையின் சிரிப்பைப் போன்ற மலர்க்கூட்டங்களும்  பாடித் திரியும் பறவைகளும், சிரித்த முகத்தோடு வணங்கும் பண்புள்ள மனிதர்களும் மனத்தைக் கவரும் நாடு. கூட்டத்தில் தெரியாது பிறர் மேல் தொட்டு விட நேர்ந்தாலும் தங்களை அறியாது உடன் மன்னிப்புக் கோரும் உயர் குணம். வாழ்வை ஒரு ரசனையோடு வாழ்ந்து பார்க்கும் மனநிலை! 

இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்டச் சரிவுகளைத் தாண்டி சரித்திரம் படைத்த சாதனை. கலைகள் முதற்கொண்டு, அறிவியல் வரை உச்சத்தில் நிற்கும் பாங்கு. சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து, அவர்களைத் தங்கள் அன்பாலும், நடத்தையாலும் வெற்றி கொள்ளும் பக்குவம் இவை பிரெஞ்சு மக்களுக்கே உரியவை. கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்ட நாடாயினும், பிற மதத்தினர் தங்கள் விருப்பம் போல் இறையுணர்வில் வாழ வழிவகுக்கும் பரந்த மனப்பான்மையும் இவர்களுக்கு உண்டு.

ஒரு நாட்டின் பெருமையை ஒரு ஏட்டின் சில வரிகளில் அடக்கி விட முடியாது. ஒரு கோடி மட்டுமே காட்டியுள்ளோம். பிரான்சின் மன்னராட்சி அனுபவங்களும், உலகுக்கே வழி காட்டிய அவர்களது புரட்சியும், அதன்மூலம் துளிர்த்த ஜனநாயக உணர்வும், திறந்த புத்தகம் போலான இன்றைய நடைமுறை வாழ்வும் ஆழ்ந்தறிய வேண்டிய ஒன்று. நுனிப் புல்லாவது மேய்வோமே!

திருமதி சிமோன் 

3 commentaires:

  1. நன்று !
    தொடர்க!

    RépondreSupprimer
  2. c'est un travail vraiment très plausible et apporte une touche appréciable sur l'histoire , la culture et les oeuvres littéraires de la France ...félicitations!
    ch.henri

    RépondreSupprimer