பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

காதல் விசித்திரம்:


காதல் திருமணம் செய்துகொண்ட பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் காதலில் விழுந்து விட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிள்ளைகளின் தேர்வு குறித்து சந்தேகம் ஒருபுறம் இருக்க உற்றார் சுற்றத்தாரின் வாய்க்குப் பூட்டு  போட முடியாதே என்ற அச்சம்தான் முக்கிய காரணமாகும்.பெரியவர்கள் இப்படி நினைக்கக் காதல் பறவைகளின் வித்தியாசமான  எண்ண அலைகளின் விளைவு : உள்ளார்ந்த  உண்மையான காதலர்கள் தங்கள் காதல்  நிலைத்து நிற்கப்     பொது இடங்களில்  உள்ள கதவு, வேலி , பாலம் இவற்றில் 'wish locks" அல்லது 'Love padlocks" பொருத்தி வந்தனர்.  இந்த வழக்கத்தின் தோற்றத்துக்குச்  சரியான ஆதாரங்கள்  இல்லை. ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகச் செரிபியாவில் உள்ள  Vrnjačka Banja என்ற இடத்தில்  வாழ்ந்த  Nada என்ற இளம் ஆசிரியை செரிபியன் உயர் அதிகாரியான Relja ஐக்  காதலித்தாள். இருவரும் காதலில் திளைத்து இருந்த சமயத்தில்   போர் நிமித்தம் கிரீஸ் சென்ற  Relja அங்கு ஒரு பெண்ணைக் காதலித்தான் ;  Nada வுக்குக்  கொடுத்த வாக்குறுதிகளை மறந்தான். இதனால் நிலை குலைந்த  Nada நோயுற்று மரணத்தைத்  தழுவினாள் .  அது முதல் அந்த ஊரில் காதல் வயப்பட்ட பெண்கள் தங்கள் பெயருடன் காதலன் பெயரையும் பூட்டுகளில் எழுதி அந்தப் பூட்டை Nadaவும்  Relja வும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட    Most Ljubavi பாலத்தில் பிணைத்தனர். இதனால் தங்கள் காதல் வெற்றி பெறும் என நம்பினர்.

இந்த வழக்கம் ஐரோப்பியாவிலும் உலகின் பல நாடுகளிலும்  பரவலாக இருந்து வருகிறது.2000 லிருந்து இந்த வழக்கம் அதிகரித்து உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிஸில் Pont des Arts, Passerelle Léopold-Sédar-Senghor ஆகிய பாலங்களில் இத்தகைய பூட்டுக்கள் நிறைய பொருத்தப் பட்டன. பாலத்தின் அழகை இவை கெடுப்பதால் 2010 இல் தடை  விதிக்கப்பட்டு பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டன. காதலர்கள் சும்மா இருப்பார்களா ! தற்பொழுது இந்த பூட்டுக்கள் Pont de l'Archevêché என்ற பாலத்தில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

மாஸ்கோவில் Vodootvodny கால்வாயின் மேல்  பாலத்தில்  அமைக்கப் பட்ட இரும்பு மரங்களில் பூட்டுக்களைக் காதலர்கள் பொருத்தி வந்தனர். 
இத்தாலி: ப்ளொரான்ஸின் உலக புகழ்பெற்ற    Pont Vecchio பாலத்தில் 5500 பூட்டுக்கள் பொருத்தப்பட்டு இருந்தனவாம். பாலத்தின் அழகை இவை குறைப்பதாலும் துரு , கீறல் , சிராய்ப்பு  போன்ற பாதிப்புகள் பாலத்துக்கு உண்டாவதாலும் இவை அகற்றப்பட்டனவாம்.
அயர்லாந்து: டப்ளின் நகரில் உள்ள  Ha'penny Bridge இல் சமீப காலத்தில் இத்தகைய பூட்டுக்கள் பொருத்தும் வழக்கம்  தோன்றியுள்ளதாம். இதைக் கைவிடுமாறு நகரசபை கேட்டுக் கொண்டுள்ளது. 
தென் கொரியாவில் நாம்சன் அல்லது செயோல் கோபுரத்தின் வேலிகளில்   பூட்டுக்களைப்  பொருத்துவதே மனத்துக்கு விருப்பமான செயலாக அந்நாட்டுக் காதலர்கள் நினைக்கிறார்களாம்.

ஜெர்மனி: Hohenzollern Bridge  - ஜெர்மனியில் உள்ள முக்கியமான பாலம்.   தற்காப்புக்காக இண்டாம்  உலகப் போரின் பொழுது தகர்க்கப்பட்டாலும் மறுபடியும் கட்டியெழுப்பப்பட்ட மிக நீளமான இரயில் பாலம் ( 409.19 மீட்டர் ). இதையும் விட்டு வைக்கவில்லை காதல் ஜோடிகள்.இந்த பாலத்தில் அமைந்துள்ள நடைபாதை வேலிகளில்  2008 முதல் பூட்டுக்கள் பொருத்தத் தொடங்கினர்.இப்பாலங்களின் கீழே ஓடும் ரயில்களால் உண்டாகும் மின்காந்த சக்தி இந்த பூட்டுக்களில் தங்கி தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

Uruguay: தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள  நாடு . இதன் தலைநகரம் Montevideo. இங்கே உள்ள ஒரு நீரூற்றின் முன் ஆங்கிலத்தில் உள்ள வசனம்   இதோ:
"The legend of this young fountain tells us that if a lock with the initials of two people in love is placed in it, they will return together to the fountain and their love will be forever locked."

Nits என்ற டச்சு பாப் குழுவினர் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட Malpansa என்ற தங்கள் ஆல்பத்தில் Love Locks என்ற பாடலைப் பாடிக் காதலர்களுக்கு  மகிழ்ச்சி ஊட்டியுள்ளார்கள்.

தொகுப்பு: லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire