பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 mars 2013

இன்றைய அறிமுகம்

                                                          
ஔரங்கஜேப்


ஔரங்கஜேப், வரலாற்றில் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மிக சரியான நபர் என்று நடுநிலையாக வரலாற்றை எழுதியவர்களால் பாராட்டப்படுபவர். இந்தியாவை ஆண்ட மன்னர்களில் இவரை பற்றி மட்டுமே ஆயிரக்கணக்கில் ஆராய்ச்சி கட்டுரைகளும் நூற்றுக்கணக்கில் நூல்களும் பல வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்டு இருந்தாலும் இவரை பற்றி எந்த ஒரு தீர்க்கமான முடிவுக்கும் இது வரையிலும் யாராலும் வர முடியவில்லை என்பதே உண்மை.

ஜோசப் கோயபல்சின், ஒருபொய்யை திரும்பதிரும்ப சொன்னால் அது மெய் ஆகிவிடுகிறது என்ற தத்துவத்தின்படி பிற மதத்தின் சுதந்திரத்தை பாதுகாத்தல் மன்னரின் கடமை என்று இருந்தவரை,ஹிந்துக்களின் பகைவர் என்று தங்களின் தயவை எதிர்பார்க்கும் இந்தியர்களை வைத்து அப்போது நம்மை ஆண்ட வெள்ளையர்கள் வரலாறை எழுதினர் அதில் வெற்றியும் கண்டனர்.

ஔரங்க என்பதற்கு அரசுசிம்மாசனம்,ஜேப் என்பதற்கு அழகு என்றும் (பார்சீய மொழியில்)பொருள்படும் பெயரை கூட ஔரங்கசீப் என மாற்றியவர்கள் எழுதிய வரலாறு தான் நாம் பள்ளிகூடங்களில் படித்தது.

அக்டோபர் 24,1618 மன்னர் ஷாஜகானுக்கும்,மும்தாஜுக்கும் 6வது குழந்தையாக பிறந்தவர்.தாரா,ஷுஜா,ஔரங்கஜேப்,முராத் என நான்கு மகன்கள் இருந்தாலும் தந்தையால் ஔரங்கஜேப், 16 வது முதலே 10000 வீரர்கள் அடங்கிய குதிரை படைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டவர் வாழ்வின் இறுதி வரை (வயது 91)போர்களத்திலே இருந்தார்.மாறாக பிற சகோதரர்கள் தந்தை ஷாஜஹானின் அன்பு அரவணைப்பில் சொகுசாக அரண்மனை வாசம் புரிந்தனர், அவர்கள் பேருக்கு சில போர்களில் பங்கு கொண்டாலும் வெற்றி அடையவில்லை எனபது தனி வரலாறு.

ஆனால் இவர் (1636-1644)ல் தெற்கே தக்காணத்தின் கவர்னர்,அப்போது தந்தையின் ஏற்பாட்டில் 18 மே 1637 இல் பாரசீக அரசகுடியின் உறுப்பினர் ஷானவாசின் மகள் தில்ராஸ் பானு பேகம் என்னும் பெண்ணை மணம்முடித்தார்.1645 இல் குஜராத்தின் கவர்னராகவும்,1648 முதல் 1652 வரை முல்தானின் கவர்னராகவும் பதவி வகித்தார்.1652 முதல் 1657-58 வரை மீண்டும் தக்காணத்தில் கவர்னராக இருந்தார்.1658 ஜூலை 31 ல் (  சிலர் 21 என்கின்றனர்)வாணவேடிக்கை,ஆடம்பரம் என இல்லாமல் மிகமிக எளிமையாக முடிசூட்டிகொண்டார்.

மொகலாய மன்னர்களிலேயே மது,மாது(4 மனைவிகள் மட்டுமே,அரசர்களுக்கே உரித்தான அந்தபுர அழகிகளுக்கு தடை) பழக்கம் இல்லாதவர். தனிமனித ஒழுக்கத்தில் இவரை போல ஒழுக்கமானவரை பார்ப்பது கடினம்.நேர்மையும் கண்டிப்பும் கொண்ட மிகசிறந்த நிர்வாகி என்று (வைஸ்ராயாக தெற்கு பகுதியை ஆண்டபோது) பெயர்பெற்றபோது வயது 18 மட்டுமே, என்றால் இவரின் நிர்வாக திறமையை புரிந்து கொள்ளலாம்.

மன்னராக தந்தையே என்றாலும் தவறை சுட்டிக்காட்ட தவறவில்லை.ஷாஜஹானின் வீண் ஆடம்பரமான தனிமனித வாழ்க்கை குறித்து இவர், தந்தையும்,மன்னருமான ஷாஜஹானுக்கு எழுதிய கடிதத்தில்  ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க கூடாது,மன்னரின் கடமை குடிமக்களை சிறந்தமுறையில் பாதுகாப்பது,அதை விட்டு உல்லாசமாக வாழ்வதிலும்,கேளிக்கைகளில் ஆர்வம் காட்டுவதும் அல்ல, என்று குறிப்பிட்டு இருந்தார்.

போர்களத்தில் பிரார்த்தனை:

1647 ல் தந்தையின் கட்டளை ஏற்று 25,000 வீரர்களுடன் படாக்ஷான்  (ஆப்கானிஸ்தான் )சென்ற ஔரங்கஜேப், அங்கு முகாமிட்டு இருந்த அல்பேனியர்களை அர்பான்க் என்னுமிடத்தில் தாக்கி விரட்டி அடித்தார் .ஆனால் பால்க் பகுதியில் வலிமையாக மோதிய  10,00,000 உஸ்பெக்கியர்களை எளிதில் எதிர் கொள்ள முடியவில்லை கடுமையான போர் நடந்து கொண்டு இருந்த வேளையில் தொழுகை நேரம் வந்ததை அறிந்த ஔரங்கஜேப், குதிரையில் இருந்து இறங்கி வந்து அமைதியாக தொழுகை புரிய ஆரம்பித்ததை கண்ட உஸ் பெக்கியர்கள் இத்துணை ஆன்மீக பலம் கொண்டவருடன் போரிடுவது நாமே நம் அழிவை வரவேற்பதாகும் என்று கூறி போரை கைவிட்டு திரும்பி சென்றனர் என்பது பல வரலாற்று ஆசிரியர்கள் உறுதி படுத்தும் செய்தி ஆகும்.

ஔரங்கஜேப் இன் ஆட்சி காலத்தில் மொகலாய பேரரசு தமிழகத்தில் செஞ்சி, நஸ்ரத் கட்டாஹ் (Nasrat Gaddah)என்று பெயர் மாற்றப்பட்டு மொகலாயரின் வெற்றிக்கு பாடுபட்ட ராஜபுத்திர தளபதியான சௌரூப்சிங்கிற்கு (இவர் ராஜா தேசிங்கின் தந்தை ஆவர்) ஔரங்கஜேப்  உத்தரவின்படி 18-1-1700 இல் அளிக்கப்பட்டது.அவரும் மொகலாயரின் அதிகாரத்திற்கு உட்பட்டுசெஞ்சிகோட்டையுடன்,திண்டிவனம்,வழுதாவூர்,திருகோவிலூர்,மஞ்சகுப்பம்,திருப்பாப்புலியூர், வேட்டைவனம் போன்ற பகுதிகளையும் ஆண்டு வந்தார்.

ஆலம்கீர் நாமா என்ற ஔரங்கஜேப்பின் சரிதையை சொல்கிற நூலை எழுதிய ஆசிரியர் கூறுகிறார் 24 மணி நேரத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கி ஓய்வு எடுத்தார், ஔரங்கஜேப். கி.பி.1640 முதல் 1667 வரை இந்தியாவில் சுற்றுபிரயானம் செய்த தவேர்நியர் எழுதிய நூலில் ஔரங்கஜேப் மாமிச உணவு உண்ணாதவர் என குறிப்பிடுகிறார்.(No animal food passed hi slips) Fean Baptiste Tavernier, Travels in india, Translated by V.Ball,London,1889,Vol.1,Page 338.

லேன்பூல் என்ற சரித்திர ஆசிரியர் குறிப்பிடுகிறார், …for besides this he slept on the ground,with only a tiger's skin over him. ஔரங்கஜேப் தரையில் படுத்து இருப்பார், புலிதோலை தனது மேலே போர்த்தி இருப்பார்.

முஸ்லிம்கள் யாராயினும் வாழ்வில் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ வேண்டும் என்ற அண்ணல் நபி (ஸல்)அவர்களின் போதனைபடி ஔரங்கஜேப் தானே தொப்பிகள் தயாரித்தார்,திருக்குரானை மனனம் செய்திருந்த அவர் தனது கரங்களால் பிரதிகள் எடுத்து இவைகளின் மூலம் கிடைத்த வருவாயை தனது செலவுகளுக்காக செலவழித்தார்.இஸ்லாம் மார்க்கத்தில் தடை செய்யப்பட ஆடம்பர ஆடைகளை ஔரங்கஜேப் அணிந்ததில்லை,தங்கம்,வெள்ளி  பாத்திரங்களை தனது சொந்த தேவைகளுக்காக உபயோகித்ததில்லை,என்று bernier ,கால்பர்ட் (Monseigneur Colbert)என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நோய்வாய்பட்டுஇருந்த நண்பர் கான் பெரோஸ் ஜங் (Khan Feroz Jang) என்பவருக்கு ஔரங்கஜேப், எழுதிய கடிதத்தில் நோய்வாய்பட்டு இருக்கும் தங்களை சந்திக்க எனக்கு துணிவு இல்லை,எனவே எனது கண்களை வைத்து பார்பதற்கு சதாத் கானை அங்கு அனுப்பிஉள்ளேன்,தங்கள் பூரண குணமடைந்து நல்ல நிலைக்கு வரும்வரை எந்தவித பழங்களையும் நான் சாப்பிடமாட்டேன் என்று குறிப்பிடுகிறார்.

பாரசீகர்கள் நௌரொஜ் (Nouroz)என்னும் புத்தாண்டு விழாவை மார்ச் 21 இல் கொண்டாடுவது வழக்கம்,அப்போது மன்னரின் எடைக்கு எடை பொன்,வெள்ளி,பொருள்களை பரிசாக பெற்று வந்தனர்,இது அக்பர் காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வந்த பழக்கம்.வீண் ஆடம்பரங்களை வெறுத்து ஓதுக்கிய ஔரங்கஜேப் தனது ஆட்சி காலத்தில் இதை நிறுத்தினார் விளைவு, ஆண்டு தோறும் பொன்னையும் பொருளையும் கொண்டுபோய் அனுபவித்து வந்த கூட்டத்தினர் வீண்பழிகளை தூற்றினர். அதே போல கஞ்சா ,அபின்,போன்ற போதை வஸ்துகள் இவரின் ஆட்சி காலத்தில் தடைசெய்யப்பட்டதால்  சில பைராகி களும், மததுறவிகளும், கஞ்சா புகைப்பதும்,அபின் அருந்துவதும்,தங்களது வழிபாட்டு முறைக்கான அனுமதிக்கப்பட்ட செயல்கள் என்று கூறி ஔரங்கஜேப் அதை தடை செய்து விட்டதால் மத விரோதி போல சித்தரிக்க தொடக்கி விட்டனர்.

ஒருமுறை புனித மக்கா நகரின் ஷெரிப் பொருளுதவி வேண்டி தனது தூதரை ஔரங்கஜேப்பிடம் அனுப்பி வைக்க ஔரங்கஜேப் அவருக்கு பொருளுதவி செய்ய மறுத்ததோடு எனது தேசத்தில் (இந்தியாவில்)உள்ள ஏழை எளிய மக்களுக்கு அந்த பணத்தை விநியோகிக்க கூடாதா ? என்று கேட்டு இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று தூதரிடம் சொல்லி அனுப்பியவர் ஔரங்கஜேப்.

அது வரை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட நாணயங்களில் இருந்த இஸ்லாமிய மதகோட்பாட்டை (வணக்கத்துக்குரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை,நபிகள் நாயகம்(ஸல்)இறைவனின் இறுதி தூதராவார்கள்) நாணயங்களில் பொறிக்கும் வழக்கத்தை கைவிட்டவர், ஔரங்கஜேப்.

ஔரங்கஜேப்பிடம் சில முஸ்லிம் நண்பர்கள்,சென்று உயர் பதவி வகிக்கும் இரு மாற்றுமத நபர்களை அவர்கள் முஸ்லிம் இல்லாதகாரணத்தால் பதவி விலக்கும்படி கூற அதற்கு அரசியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை,அவரவர் அவரவர் மதத்தை பின்பற்றட்டும் என கூறியவர் ஔரங்கஜேப் ,மேலும்  ஔரங்கஜேப் பதவிக்கு வரும்போது அரசில் மன்சப்தாராக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 21.6 சதவீதம் மட்டுமே,இவரின் ஆட்சியில் இவர்களின் எண்ணிக்கை 31.6 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.(மொகலாய பேரரசில் மன்சப்தார்கள் ஆளும் குழுவினராக இருந்தவர்கள்)சூரத் நகரில் சில காலம் தங்கி இருந்த காப்டன் அலெக்ஸ்சாந்தர் தமது நூலில் ஔரங்கஜேப்பின் ஆட்சியில் பாரசீகர்கள்,கிறிஸ்துவர்கள்,ஹிந்துகள் ஆகிய யாவரும் தங்களது மத கடமைகளை ஒழுங்காக ஆற்ற முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.Caption Alexander Hamilton,A New Account of the East Indies,Vol,1,Page,159,162 and 163.

தன்னுடைய இறுதி ஊர்வலத்தை கூட மிக ஆடம்பரமான  முறையில் ஏற்பாடு செய்து வழியெங்கும் தங்க,வெள்ளி நாணயங்கள் அள்ளி இறைக்கப்படவேண்டுமேன்று மரண சாசனம் எழுதிய ஷாஜஹானை போல அல்லாமல் ஔரங்கஜேப் எழுதிய இறுதி உயில் ஒன்று போதும் இவரை பற்றி அறிய:

தம்மால் செய்யப்பட்ட குல்லாக்கள் விற்றபணம் நான்கு ருபாய் இரண்டு அணாவை கொண்டு கபன் எனப்படும்,இறந்த உடலை மூடும் துணியை வாங்க வேண்டும் என்றும்,திருக்குரான் எழுதிய வகையில் தமக்கு கிடைத்த 350 ரூபாய்களை சாலிஹான ஏழைகளுக்கு தானம் செய்யவேண்டும் என்றும்,தனது சமாதியின் மேல் எந்தவிதமான கட்டிடமோ,அல்லது நினைவு ஸ்தூபியோ கட்டகூடாது என்று எழுது பூர்வமாக ஆணை இட்டார் என்று இவரின் சரிதம் எழுதிய ஜாதுநாத் சர்க்கார் குறிப்பிடுகிறார். 13 நாட்கள் நோய்வாய்பட்ட நிலையில் 21 பெப்ரவரி 1707 ல் அஹமத் நகரில் இருக்கும் போது இப்புவி வாழ்வை துறந்தார் ஔரங்கஜேப்.

50 ஆண்டுகள் 2 மாதங்கள் 27 நாட்கள் இந்தியாவின் பெரும் பகுதியை அரசாட்சி புரிந்த ஔரங்கஜேப் இன் உடல் தௌலதபாத் அருகில் குல்தாபாதில் ஔரங்காபாதிற்கு சமீபத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அப்துல் தயுப்.

Aucun commentaire:

Enregistrer un commentaire