பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 23 mai 2013

தமிழும், வழியும்

                                                       


நாடு வாழ, நன்மைக்  காண, நல்லப் பாதை வேண்டுமே,
ஏடு சொன்ன உண்மை, நேர்மை இன்றிக் கல்வி உள்ளதே!
வீடு காக்க அன்பு, பண்பு மிச்ச மீதி இல்லையே!
கேடு நீக்க, மாசு போக்கக்  கண்டு வாக்குச் சொல்லுமே!


உலகினில் மானுடம் ஒன்றி யங்கியே
நிலமெனும் தாய்தனை நித்தம் வாழ்த்தியே
வலம்வர நல்வளம் மன்றம் சேருமே
உலவிட இக்தொரு ஊரும் சொர்க்கமே!


தாய்சொல்லைத் தட்டாமல் கண்காணா நாட்டினிலும் தன்னுணர்வு                                         காத்திருந்தான்!
தவமியற்றிப் பெற்றாளோ  பெறற்கரிய மகாத்மாவாம் தங்கமகன், தன்னுயிராம்
தாய்நாட்டின் பெருமைதனை உலகறியச் செய்திடவே, தன்னலமே
தான் துறந்து
தகைவிலாத சத்தியத்தின் முழுவடிவாய் மாறிநின்றான்! தனக்கொருப் பாதையென
வாய்மையினைத் தேர்ந்தெடுத்தே இந்தியர்க்கு மாறாத வழிகாட்டி, உத்தமனாய்
வாய்த்தஅந்த காந்தியவன் சாற்றிநின்ற கொள்கையென்றும் வாழ்ந்திடவே
செய்திடுவோம்!
தூய்மையினைப் போற்றிஎன்றும் சரித்திரத்தின் ஏட்டினிலே தூதர்க
ளாய்அமைதி
துலங்கிடவே துணைபுரிவோம் மனிதகுலம் தழைத்திடவே  துயர்தனையும்
ஏற்றிடுவோம்!

திருமதி சிமோன்



Aucun commentaire:

Enregistrer un commentaire