பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 décembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                   

அன்புடையீர்,

வணக்கம். "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப்போது கடவுள் "ஒளி தோன்றுக" என்றார்: "ஒளி தோன்றிற்று" என்கிறது கிறித்தவ மறையுரை.

இவ்வுலகும், மனிதரும் உருவானதற்குக் காரணம் இறைவன். இறைவன் மனிதனுடன் கொண்டுள்ள உறவு, படைப்பிலிருந்தே தொடங்குகிறது என்பது அநேகமாக எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது . இறைவனை ஒளியாகக் கொள்வது அனைவரும் ஒப்புக்கொண்ட சித்தாந்தமாகவும், ஞானம் பெறுபவர்களின் அனுபவமாகவும் உள்ளது.

இருள் என்பது அச்சம் தரக்கூடியதாய், மறைந்து செயலாற்ற  இடமளிப்பதாய் இருக்கிறது.  (பெரும்பாலும் ரகசியமாக செய்ய விரும்பும் காரியங்கள் தரக் குறைவானதாய், பிறருக்குக் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும்)   மாறாக ஒளி மனதை விசாலப்படுத்துவதாய், பகிரங்கமாகச் செயல் படுவதாய், நீதி, நேர்மை உண்மை  எனும்  திண்மை கொண்டதாய் விளங்குகிறது. அது கடவுளின் அம்சம் எனக் கொள்வது முற்றிலும் பொருத்தமானதே!

இயேசு, "நானே உலகின் ஒளி. என்னைப் பின் செல்பவன் இருளில் நடவான்" என்கிறார்.

ஆரூரார், சம்ஹாரத் தாண்டவத்தில் சிவன் அணையா நெருப்பேந்தி, எரிகின்ற நிலத்தில் ஆடுவதாகக் கூறுகிறார். ஐந்து மூலகங்களில் நீரும், மண்ணும் நெருப்பில் உருகி, காற்றில் கரைந்து, வான் வெளியின் வெறுமையில் காணமல் போகிறது.

 மனமே அவன் ஆடும் நிலம். தன்  முனைப்பு (தான் எனும் எண்ணம்) எங்கே அழிகிறதோ அங்கே மாயை, செயல் எல்லாமே எரிந்தழிகின்றன. நெருப்பால் தூய்மை பெற்று, இன்ப துன்பங்களைச் சரிசமமாகக் காணும் துறவு பூண்டு வெறுமையுற்ற மனதில் இறைவன் குடி புகுகின்றான். எல்லாம் அவன் செயலாகும் நிலை, குறையில்லா மனதைத் தருகிறது. ஆன்மா வாழும் போதே அமைதியும், சாந்தியும் பெறுகிறது.

திருமதி சிமோன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire