பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 mars 2010

சிலேடை

இரண்டு பொருள்படக் கூறுதல் சிலேடை எனப்படும். தமிழில் “இரட்டுற மொழிதல்” என வழங்குகிறோம்.

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலை ராயன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
                                                    காளமேகப்புலவர்

(போர்க்களத்தில் பகைவரை வாரிக் கொன்று போரில் சிறந்து விளங்கும் யானை கோட்டைக்குள் புகுவது போல், நெற்களத்தில் கதிர்கள் வாரி அடிக்கப்பட்டு பின் நெற்கோட்டையில் போராய் பொலிவுற்று விளங்குவதால் வைக்கோல் யானைக்கு ஒப்பாகும்)