பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

எண்ணப் பரிமாற்றம்

                                  


அன்புடையீர்,

வணக்கம்.  உலகம் தன் பூரண எழிலோடு வண்ண மலர்ச் சோலையாய் விளங்கி வந்த நேரம்! அமைதியை இனிமையாகக் கலைத்து, இளந்தளிர்களினூடே தவழ்ந்து சலசலக்கும் தென்றல்! அதனுடன் போட்டியிட்டு தன் நீர்பரப்பின் ஓட்டத்தில் ஓசையிடும் அருவி! அதன் ஆவேச ஒலியைச் சற்றே தணித்து, தென்றலோடு இணைந்து இலயத்தோடு நடை பயிலும் நதி! பூக்களில் தேனருந்தி ரீங்கரிக்கும் வண்டு! சூழல் தரும் போதையில் கொஞ்சும் கிளி! இணை தேடி அழைக்கும் குயிலின்  ஏக்கக் குரல்! தன்னை மறந்து தோகை விரித்தாடும் மயில்!

ஆதி மனிதனை மட்டும் இயற்கை மவுனமாயிருக்க விடுமா! இப்படித்தான்  அவற்றோடு அவனும் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பான்! மகிழ்ச்சியையும், காதலையும் வெளிப்படுத்த ஆரம்பித்த ஓசை, நாளடைவில் உள்ளத்து உணர்ச்சிகளை, அலை மோதும் ஆசைகளை, ஏமாற்றத்தை, எதிர் பார்ப்பை நம்பிக்கையை, தாபத்தைக் கொட்டும் "இசை" ஆகப் பரிணமித்திருக்கும்!

தமிழன் எதிலுமே ஆழ்ந்து சிந்தித்து கற்பனையின் எல்லையைத் தொடுபவன். இந்த மானுட வாழ்வுக்குப் பின் ... அவன் தொட்ட எல்லை கருணை வடிவான பரம்பொருள் ஆனது. அது அவன் மனதை நிறைத்து, எல்லாம்  ஒன்று என்ற பரந்த எண்ணத்தையும், எல்லாம் எல்லோருக்கும் என்ற விரிந்த நோக்கையும் அளித்தது. அச்சிகரத்தில் தான் படைத்த இசையையும் இறைவனுக்கே சமர்ப்பித்தான். எனவே அது தன்னால் உருவாக்கப்பட்டது என்று தனது சந்ததிகளுக்கு அறிவிக்கவும் மறந்து போனான்!

தமிழனின் நாடி நரம்புகளில் பாய்ந்த குருதியில் கலந்த தமிழிசையை, ஆழ்கடலின் ஆழத்தை அறிய விரும்பும் ஆசையில், கடலலையின் ஈரத்தைத் தொட்டிருக்கிறோம். அது வெறும் கடல் நுரையாய் இருக்காது என்றே நம்புகிறோம்!

திருமதி சிமோன்