பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

இன்னிசை நாதம்

மொழி புரிகிறதோ இல்லையோ, இசை உள்ளத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி
பதனப்படுத்தி, இனம் புரியா இலயத்தில் தன்னை மறக்கச் செய்கிறது. அதற்கு வித்திடும் கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இத்தலைமுறையில் அவர்களில் ஒரு சிலர்:



நித்திய ஸ்ரீ 


தாய் லலிதா சிவகுமார் இவருடைய முதல் ஆசிரியை. டி.கே. பட்டம்மாளுடைய மாணவியும், பேத்தியுமான இவர் இசைக் குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டக்காரர். தாய் வழிப் பாட்டன் பாலக்காடு மணி அய்யரான மிருதங்க வித்வான்.

1987  முதல் பாடுகிறார். 1990  இல் ஏ.ஐ.ஆர். பரிசும், "A" கிரேடு ஆர்டிஸ்ட் ராங்கும் பெற்றவர். "பாரத் கலாச்சார்" , 'யுவ கலா பாரதி' என்னும் பட்டத்தைத் தந்தது.
1994 இல் தமிழ் நாடு வெல்பேர் அசோசியேஷன் "இன்னிசை மாமணி" பட்டத்தால் கௌரவித்தது. "பெஸ்ட் கான்செர்ட் அவார்ட்", "பெஸ்ட் ப்ரோமிசிங் ஆர்டிஸ்ட்" என பலசிறப்புகள் வந்தடைந்தன !

வட நாட்டிலும், வெளி நாட்டிலும் சங்கீதக் கச்சேரிகள் பல செய்துள்ளார். பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். பல சினிமாக்களிலும் இவர் குரலைக் கேட்கலாம் ! கோவையில் "பாபநாசம் சிவன் - எ. லெஜென்ட்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம்! 






சுதா ரகுநாதன் 


சென்னை வாசி. எம். ஏ. எகனோமிக்ஸ் பரிசு வாங்கி முடித்தவர். "அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடென்ட்" என்று இவர் வாங்கிய பட்டத்தை வெகு நாள் யாரும் பெற முடியாமல் இருந்தது. 

கர்னாடக இசையை, பாடகியான அம்மாவிடமே கற்றார்! 1977 இல் வித்வான் பி.வி. லட்சுமணன் ஆசிரியராக, மத்திய அரசின் உதவித் தொகைப் பெற்று, பயின்றார். பத்ம விபூஷன் சங்கீத கலாநிதி டாக்டர் எம்.எல் .வசந்தகுமாரியுடன்  முதல் கச்சேரி அரங்கேறியது.

பிரசார் பாரதி, சென்னை "டாப் ரேங்க் ஆர்டிஸ்ட்" என்ற பட்டத்தை வழங்கியது.
ஆல் இந்திய ரேடியோவும், தூரதர்ஷனும் முக்கியப் பங்களிப்பை இவருக்கு அளிக்கத் தவறுவதில்லை!

இது வரை 80 லட்ச ரூபாய்களை ஏழைகளுக்காக தந்துள்ளார். "சமுதாயா பவுண்டேசன்" என்னும் அமைப்பை 1999  ஜூலை ஆரம்பித்துள்ளார்.

இவர் உயர உயர ஏழைகளையும் உயர்த்த முற்படுவார் என்று நம்பலாம்.




                                                           
                                                                             

                                                             பி. உன்னி கிருஷ்ணன்


கேரளா 1966 இல் இந்த இசை வித்தகனைப் பெற்றது. சென்னை பல்கலைக் கழகத்தில் பி.காம். படித்து, '87  முதல் '92  வரை பாரிஸ் கண்பெக்ஸனரி லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்துப் பின் முழு நேரப் பாடகரானார்.

12  வயதில் மேடையேறிய இவர் சேஷாத்ரியிடம் பாடம் கற்றார். "வீணை தனம்மாள் பாணி" யைப் பின்பற்றி சங்கீதக் கலாநிதிகள் டி.பிருந்தா, டாக்டர் தி.விஸ்வநாதன் ஆகியோரோடு பாடினார்.

சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல கர்நாடிக் பாடல்களைப் பாடியுள்ளார். பெர்மனென்ட் ஜட்ஜ் ஆக ஏர்டெல் "சூப்பர் சிங்கர்" டி.வி. ஷோவில் 
2006 -2008 -2010 -2011 இருந்திருக்கிறார். ஆசியாநெட் ஸ்டார் சிங்கர் 2008 . இதே வருடம் 'நோவேல் ஜாஸ் கான்செர்ட்' ஒன்றை திருவனந்தபுரத்தில் நடத்தினார்.

பெற்ற விருதுகள்:

தேசிய விருது பின்னணிப் பாடகர் 1994 . - கலைமாமணி தமிழ் நாடு - யுவ கலா பாரதி பாரத் கலாச்சார் - தேசிய விருது (உயிரும் நீயே) - நாத பூஷணம் தமிழ் நாடு - பெஸ்ட் ராகா அவார்ட் மியூசிக் அகாடமி - இசைப் பேரொளி அவார்ட் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் '98  - ஏ கிரேட் ஆர்டிஸ்ட் ஆல் இந்திய ரேடியோ 

அமெரிக்கா, லண்டன்,ஆஸ்ட்ரேலியா, நியுசிலாந்த்,சவுத் ஆப்ரிகா, பார் ஈஸ்ட்,
மிடில் ஈஸ்ட் போன்ற இடங்களில் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.

இவரது விருப்பம் திரைப்படங்களில் கர்னாடக இசையில் பாடுவதே! மாறி வரும் விருப்பத்திற்கேற்ப பழமையைப் புதுமையில் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். எளியோருக்கு கர்னாடக இசை கடினமானது. ஆனால் இளையோர் இதில் ஆர்வமாக உள்ளனர். பல சிரமங்களுக்கிடையில் இசை கேட்க வரும் அவர்களுக்கு அதைச் சுவையாகத் தருவது நமது கடமை என்பது இவர் கருத்து. 

திருமதி சிமோன்