பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 avril 2013

இன்றைய அறிமுகம்


மறை(ற)க்கப்பட்ட மாவீரன் மருதநாயகம்.

மருதநாயகம், ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலை போராட்ட வீரன்,தமிழன்.இருந்தும் நம்மவர்களால் மறக்கப்பட்ட,மறைக்கப்பட்ட மாவீரன்,இவரை பற்றி பள்ளிப் பாட புத்தகங்களில் கூட வரலாறு இல்லை எனபது வருத்தத்துக்குரிய செய்தி.

 நமது தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுப்படி (இவரின் பிறந்த ஆண்டு துல்லியமாக தெரியாத காரனத்தினால்) இவர் 1720-திற்கும்1730 திற்கும் இடைப்பட்ட காலகட்டதில் ராமநாதபுரம் மாவட்ட பனையூரில் ஹிந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்து பிறகு இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறியதாகவும் பிறகு மதுரையை ஆண்ட காரணத்தால் மருதநாயகம் என்றும், இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப்,என்றும் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் அறியப்படுகிறார்.

இளமைமுதல் மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திறமைகள் கொண்டு இருந்தாலும் போர்களத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் சிறிது காலத்துக்கு பணிபுரிந்தது இவரின் முதல் ராணுவ அனுபவம்.பிறகு புதுச்சேரி சென்று பிரெஞ்சுபடையில் சாதாரண ராணுவ வீரனாக சேர்ந்து தன்னுடைய அறிவால்,தலைமைபண்பால்,போர்நுட்பதால் பிரெஞ்சுதளபதிகளின் கவனத்தை கவர்ந்து முக்கிய பதவிகளை  பெற்றார். 

ஔரங்கஜேப் பின் மறைவுக்கு பின் மொகலாய பேரரசு சரியாய் ஆரம்பித்த கால கட்டம், குறிப்பாக தெனிந்தியாவில் கர்நாடக நவாப்,ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப்,போன்ற சிற்றரசுகள் தோன்ற தொடங்கி ஆற்காடு நவாபாக யார்முடிசூட்டி கொள்வது என்ற போட்டியில் ஒரே ரத்த உறவுகளான சாந்தா சாஹிபும்,முஹம்மது அலியும்,முறையே பிரெஞ்சு படை,ஆங்கிலேயப்படையினரின் ஆதரவில் மோதி கொள்ள தொடங்கின.
மருதநாயகம் பங்குகொண்ட பிரெஞ்சுபடையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்றாலும் சிலதுரோகத்தின் காரணமாக 1751 இல் ஆற்காட்டில் நடந்த போரில் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிப் திருச்சியில் நத்தர்ஷா தர்கா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

கவனிக்க:: (ஔரங்கஜேப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். இவருக்கு மேல் நிஜாம், நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.)

ஆற்காட்டை தலைநகராக கொண்டு வேலூரில் இயங்கிய ஆற்காட்டுநவாபின் அரசு எல்லாவகையிலும் முதன்மையாக இருந்ததால் இவர்களிடம் அனுமதி பெற்றுதான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேய வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.  ஆற்காட்டு போரின் தோல்விக்குப்பின் பிரெஞ்ச்காரர்களின்  செல்வாக்கு தமிழகத்தில் குறைந்ததால் அவர்கள் புதுவை,காரைக்காலுடன் தங்களின் ஆதிக்கத்தை நிறுத்திக்கொண்டனர்.மேலும் பிரெஞ்ச்தளபதிகளுடன் மருதநாயகத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணத்தால் மருதநாயகம் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர்.

 விதியின் வசத்தால் அப்போது மருதநாயகம் ஆங்கிலேயர் சார்பாக ஒரு போரை சந்தித்தார் எதிர்அணியில் இருந்தவர் மைசூர் சிங்கம்  ஹைதர் அலி.(தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகமும் பின்னணி என்பது உண்மை).ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர்.

திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல்(இன்றைய) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன,மற்றும் இன்று பரபரப்பாக பேசப்படும் பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான். வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ளமேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான்.அப்போது சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார். மேலும்  திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்தார்.

இதைப்பற்றி கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர்(“A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA”) என்ற தன்னுடைய நூலில் “மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே மருதநாயகம் தெற்கு சீமையின் கவர்னராக நியமிக்கப்பட்டதில் இருந்து பொறாமையில் இருந்த ஆற்காட்டு நவாபினால் சிறந்த நிர்வாகத்தினால் மருதநாயகம் அடைந்து வந்த புகழையும் ஜீரணிக்க இயலவில்லை.இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது.(இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர்). திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்க தடை என ஆற்காடு நவாப் கூற எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம் முறையிட பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.

அடுத்த கட்டமாக ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்றும், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறினார். இப்படி மருதநாயகதுக்கும்,ஆற்காட்டு நவாபுக்கும்,இடையே ஏற்பட்ட பனிப்போரில் குளிர் காய்ந்த ஆங்கிலேயர் ஆற்காட்டு நவாபுக்கு ஆதரவான நிலை எடுக்க, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கிய  மருதநாயகம்! நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. விளைவு????அடுத்த பகுதியில் நிறைவுறும்.

அப்துல் தயுப்.








Aucun commentaire:

Enregistrer un commentaire