பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 octobre 2013

குறும் செய்திகள்

                                                                 

ஒன்றரை அடியில் குறள்  எழுதி பலபல கருத்துக்களையும் அறிவுரைகளையும் நமக்கு அளித்த திருவள்ளுவர் நான்கடிகளில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! தனது மனைவிக்காக அந்தப் பாடலை எழுதினார்.
அவரது மனைவி வாசுகி தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து ஒருபோதும் விமரிசித்ததே இல்லை.அவர்  செய்தால் எல்லாம் சரியாகத்தான்  இருக்கும் என்று நம்பினார். எடுத்துகாட்டாக:
வள்ளுவர் சாப்பிடும் பொது ஒரு கொட்டங்குச்சியில் தண்ணீரும் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டு  சாப்பிடுவாராம்.இவற்றை அவர்  பயன்படுத்தி ஒருநாளும் அந்த அம்மையார் பார்த்ததில்லையாம்.இதற்கான காரணத்தை தான் இறக்கும் தருவாயில்தான் கணவரிடம் கேட்டு  தெரிந்துக் கொண்டாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார்.இருவருக்கும் பழைய சாதம் பரிமாறினார் அம்மையார்.அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றார். பழைய சோறு சுடுமா? அந்த அம்மையார் கேள்வியே கேட்காமல் விசிறினார்.

அத்தகைய அன்பு மனைவியின் பிரிவைத் தாளாமல் அவர் எழுதியதுதான்  அந்த நான்கடிப் பாடல் இதோ:

 அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்
இனிதா(அ) ய் என் தூங்கும் என்கண் இரவு.

அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே!என்  சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என்  பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என்  கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ!என்பது பாட்டின் உருக்கமான பொருள். இந்த காலத்தில் இப்படிப்பட்ட பெண்ணை காண முடியுமா?

காந்தி கணக்கு:

பிறரை ஏமாற்றுவதைதான் காந்தி கணக்கு என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.அதன் உண்மையான அர்த்தம் என்ன?
மகாத்மா அவர்கள் உப்பு சத்தியாகிரகம் தொடங்கியபோது வியாபாரிகள் பலர் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்தார்கள்.இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்கள் தங்கள் கடைகளில் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு பணம் தராமல் 'காந்தி கணக்கு" என்று சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்கமாட்டோம் என்றார்கள். இப்படி வந்ததுதான் காந்தி கணக்கு.

பண்டிதனைவிட பாமரன் . . .:

பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா"  என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.
ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.

சிரிப்பும் சிந்தனையும்,,,

சரியான நகைச்சுவை என்பது சிரிக்க வைத்து சிரித்தவனை சிந்திக்கவும் வைக்கவேண்டும்.

கூட்டத்தைச் சிரிக்க வைக்க காமராஜர் எப்போதும் முயன்றதில்லை.
அதற்காக நகைச்சுவை உணர்வே இல்லாதவர் என்று நினைக்க வேண்டாம். நாட்டு எண்ணமும் நாடு பற்றிய சிந்தனையுமாகவே இருந்ததால், கூட்டத்தை நகைச்சுவையால் ருசிப்படுத்த வேண்டும் என்ற நாட்டமே இல்லாமல் இருந்தார் எனலாம்.அவரது நகைச்சுவை சிந்தனை முடிச்சாக இருக்கும்.சொல்லும்போது சிரிக்க வைத்துச்சொல்லி முடிந்ததும் சிந்திக்க வைக்கும் செய்திகள் அதற்குள் அடங்கியிருக்கும்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள்  ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள்.உடனே தலைவர் சிரித்துக் கொண்டே ” நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை தேடுகிறீர்களே?” என்றார். அனைவரும் சிரித்துவிட்டார்கள்.

தொகுப்பு: லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire