பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 octobre 2013

வெட்டி வேலை

                                                   

1. எல்லா ஆண்களும் வேலை மிக்கவர்கள்.
2. எனினும் பெண்களுக்கு நேரம் ஒதுக்குவார்கள்.
3. நேரம் ஒதுக்கினாலும் சரியாகக் கவனிக்க மாட்டார்கள்.
4. கவனிக்கா விட்டாலும் ஒரு பெண் கிடைப்பாள்.
5. கிடைத்தாலும் வேறு பெண்ணைத் தேடுவார்கள்.
6. தேடினாலும் அவள் விலகிப் போவாள்.
7. விலகினாலும் தேடுவதை நிறுத்த மாட்டார்கள்!

1. பெண்கள் சேமிப்பை விரும்புவார்கள்.
2. ஆனாலும் சேலை வாங்கிக் குவிப்பார்கள்.
3. குவித்தாலும் உடை போதாமல் திண்டாடுவார்கள்.
4. திண்டாடினாலும் அழகாக அணிவார்கள்.
5. அணிந்தாலும் பழையத் துணி போலவே பாவிப்பார்கள்.
6. பழசாகப் பாவித்தாலும் பாராட்டை விரும்புவார்கள்.
7. பாராட்டும்போது  நம்ப மாட்டார்கள்.    -   நெட்டிசன்  


ஒரு ஆடு 25 ரூபாய் வீதம் இரண்டு ஆடுகளை ஒருவர் விற்றார். பிறகு ஐந்து ரூபாயை ஆடு வாங்கியவர்களிடமே கொடுத்து விடும்படி வேலைக்காரனை அனுப்பினார்.   அவன் தான் இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியை அவர்களிடம் கொடுத்தான். அவர்களும் தலைக்கு ஒன்றரை ரூபாய் எடுத்துக் கொண்டார்கள். மேலெழுந்த விதமாக இதில் குழப்பம் ஏதுமில்லை. ஆனால் கீழ்க்கண்டபடி கணக்கிட்டுப் பாருங்கள்:

ஆட்டுக்குக் கொடுத்தப் பணம் = 25.00
பிறகு பெற்றுக் கொண்டது        =   1.50
எனவே ஒரு ஆட்டின் விலை   = 25.00 - 1.50 = 23.50
இரண்டு ஆடுகள் விலை            = 23.50+23.50 = 47.00
வேலைக்காரன் எடுத்தது          = 47.00 + 2.00 = 49.00
அப்படியானால் மீதி ஒரு ரூபாய் எங்கே போயிற்று?

A to Z:

'A brown fox jumped over the lazy dogs quickly'

ஒருவர் 200 தேங்காய்களை இரு மூட்டையில் சாக்குக்கு 100 வீதம் கட்டினார். வழியிலுள்ள  100 சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு சாவடியிலும் மூட்டைக்கு ஒரு தேங்காய் வீதம் கொடுத்துவிட வேண்டும். அப்படி இருந்தும் வீட்டுக்கு 50 காய்களுடன்  சென்றார். எப்படி?

(50 சாவடிகளைக் கடந்த பின் ஒரே மூட்டை ஆக்கி விட்டால் முடியும்)


ஒரு கிலோ பஞ்சு 100 ரூபாய்க்கு வாங்கி நூத்து 50 ரூபாய்க்கு வித்தால் லாபமா, நஷ்டமா?

நஷ்டம் தான். 100 ரூபாய்க்கு பஞ்சு வாங்கி நூத்து (நூற்று) அதை 50 ரூபாய்க்கு விற்றால் நஷ்டம்தானே!

  



Aucun commentaire:

Enregistrer un commentaire