பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 31 octobre 2013

கவிதைச் சிந்தனை

                                       
                                            


எந்தப் புத்தகத்தைப் படித்தாலும்,
நமக்குள் இருப்பதுதான் எழுதி இருக்கிறது!


இருப்பதற்கென்றுதான் வருகிறோம், ஆனால் 
 இல்லாமல் போகிறோம்!


ஆர்ப்பரிக்கும் கடலின் அடித்தளம் 
மவுனம்; வெறும் மவுனம்!   -   நகுலன் 


பூப்பதெல்லாம் பூவெனில் - உன் 
புன்னகை எது?


நான் விரும்பியதெல்லாம் தொலைவில் 
நேற்று நிலவு, இன்று நீ!   -  கார்த்திகேயன்


இவன் பசுவின் பாலைக் கறந்தால் 'பசு பால் தரும்' என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால் 'காகம் வடையைத் திருடிற்று' என்கிறான்.


பாட்டன் நாக்கில் முழக்கம்:'வெள்ளையனே வெளியேறு'
பேரன் நாக்கிலேயே வெள்ளையன்.


வேறுபாடு அதிகம் இல்லை நாற்காலிக்கும், கட்டிலுக்கும்.
வீடு தூங்கக் கட்டில். நாடு தூங்க நாற்காலி. -  காசி ஆனந்தன்


கீரை விற்ற கிழவியிடம் பேரம் பேசி சேமித்தேன்
ஒரு ரூபாய் பணமும் ஒரு மூட்டை பாவமும்.


திதி நாளன்று படையல் அம்மாவுக்கு
மற்ற நாளில் பசிக்காதா என்கிறாள் குழந்தை!


மரணித்த மழலைகளில் தன் பிள்ளை இல்லையெனும் நிம்மதி
நொடிப் பொழுதாயினும் எத்தனைக் குரூரமானது!  -  சபிதா இப்ராஹிம் 


Aucun commentaire:

Enregistrer un commentaire